Monday 21 October 2013

ஆடையின்றி...!!

படித்தேன்-
ஒரு பத்திரிக்கையில்-
செய்தி!

என்னுள்-
மூண்டது-
கோபத்தீ!

ஆடையின்றி-
நகைகள்மட்டும் அணிந்து-
நடித்தாளாம்-
ஒருத்தி!

காசின்றி -
நடிக்க சொன்னால்-
ஒத்துகொள்வாளா!?-
சிந்திப்போம் -
மனதில் நிறுத்தி!

செய்வதெல்லாம்-
"களையும் " வேலையாக.!

பேர் மட்டும்-
கலைத்துறையாக.!

பாலியல் வன்கொடுமைக்கு-
கடும்தண்டனை-
உலகெல்லாம்-
கேட்கிறது!

அதன் -
தூண்டுகோல்களான -
இவர்களை-
வையகம் -
புகழ்ந்து தள்ளுது!

5 comments:

  1. காசு படுத்தும் பாடுதான் இப்படி..

    நல்ல கவிதை... சமூக சிந்தனையோடு எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    உங்கள் தளம் மொபைலில் லோட் ஆகா நேரம் எடுக்கிறது...

    ReplyDelete
  2. சிந்திக்க வேண்டியது..
    சந்திக்கும் இப்பிழைகளை...

    ReplyDelete
  3. பிணத்திற்கு சூட்டும் மாலையும்
    நிர்வாணத்திற்கு அணிவிக்கப்படும்
    அணிகலனும் நிச்ச்யம் ஒன்றுதான்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இந்தக் கொடூரம் எல்லாம் பணம் செய்யும் மாயை...

    ReplyDelete
  5. சிந்திக்க அருமையான கவிதை......

    ReplyDelete