Saturday 14 December 2013

"சாதாரண மனிதர்கள்"..!(ஓர் அரசியல் பார்வை)

     அன்பிற்கினிய சொந்தங்களே!     
        இன்றைய காலகட்டத்தில் அரசியல் எனும் வார்த்தை, பலரால் கேட்ககூடாத வார்த்தை போல் அசிங்கமாக பார்கிறார்கள்.அல்லது அலட்சியபடுத்துகிறார்கள்.அரசியல் ஒரு சாக்கடைஎன்கிறார்கள்.சரி!அது சாக்கடையாகவே இருக்கட்டுமே.,அதனை யார் சுத்தம் செய்வது.!?அந்த சாக்கடைதான்(அரசியல்)அதிகாரத்தின் உச்ச பட்சம்.அதில் எடுக்கப்படும், அல்லது தீர்மானிக்கப்படும் செயல்கள்தான்., நமக்கு நன்மை பயக்குபவை,அல்லது நாசம் செய்பவை.கொத்திட வரும் பாம்பை கண்டதும் ,நாம் ,நம் கண்களை மூடிக்கொண்டால்,பாம்பிற்கு என்ன கண்கள் தெரியாமல் போய்விடுமா!?

             இன்றைய தலைமுறை வரை சொல்லிடும் உத்தமர்களில் ஒருவர்.கர்ம வீரர் காமராஜர் அவர்கள்.அவர்களிடம் சொத்து சுகங்கள் இருக்கவில்லை.ஆனால் நல்லது செய்யணும் என்ற நல்லுள்ளமும்,அதனை செயல்படுத்த ஆட்சியும் இருந்தது.இலவச கல்வியை வழங்கினார்.இன்றுவரைக்கும் மதிக்கபடுகிறார்கள்.ஆனால் இன்று கல்வி ஏழைக்கு கிடைக்கும் நிலையிலா உள்ளது!?.காரணம் என்ன,!? சமூக அக்கறை உள்ளவர்கள்,இன்றைய உலகில் இல்லையா!?.,அல்லது நமக்கென்ன என்று அவர்கள் ஒதுங்கியதாலா!?.ஒருவன் தன் கழுதையுடன் பயணித்தான்.அப்போது அவனது எதிரி கூட்டம் வந்ததை கண்டான்.உடனே தப்பித்து ஓடிட முனைந்து ,கழுதையை அழைத்தான் .கழுதை உரிமையாளனுடன் போக மறுத்தது."யாரிடம் நான் இருந்தால் என்ன!? எப்படியும் சுமையைதானே சுமக்க போகிறேன் "என்று கழுதை சொன்னது.இது கதையாக இருக்கலாம்,ஆனால் இந்த கழுதையின் நிலைதான் .நம் நிலையும்,மாறி மாறி பிரதான கட்சிகள் ஆண்டாலும் ,நம் நிலையோ மாறாத நிலை.

                    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை, நாம் எதிர் நோக்கி உள்ளோம்.மத்தியிலுள்ள இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ்,பிஜேபி .இவர்களிடையில் என்ன !?வித்தியாசம்.100 சிசி பைக்கிற்கும் 120 சிசி பைக்கிற்கும் உள்ள வித்தியாசம்தான்.நாட்டின் இன்றைய நிலைக்கு கொஞ்சம் வேகத்தில்தான், இருவருக்கும் வித்தியாசம்.இவர்களல்லாத மாற்று அரசியலை உருவாக்க முடியுமா!?அல்லது முடியாமல் போகுமா!?

               டெல்லியில் தற்போது நடந்த தேர்தல்.அரசியல் மாற்றத்திற்கான ஒரு விதையை போட்டுள்ளது.ஆம் ,அதுதான் "ஆம் ஆத்மி"(சாதாரண மனிதர்கள்) கட்சி.இரு மலைகளுடன் மோதிய சிறு உளி.அவ்விரு கட்சியையும் கீறல் விழ செய்து விட்டது.இக்கட்சி முதலில் இவ்விரு கட்சிகளுக்கு மாற்றமாக ,களத்தில் பணியாற்றி திக்கு முக்காட வைத்தமைக்கு வாழ்த்துக்கள்.மாற்றம் தரும் என்பதை நம்புவோம்.

        என்தேச மக்களே!
 நாட்டின் மேல் அக்கறை கொண்டவர்களே!
நாமும் அரசியல் மாற்றத்திற்காக முயற்சிப்போம்.அல்லது குறைந்த பட்சமாவது நம் வாக்குகளையாவது மாற்றம் தர வருபவர்களுக்கு ,வாக்களிப்போம்.

      

3 comments:

  1. வித்தியாசம்.100 சிசி பைக்கிற்கும் 120 சிசி பைக்கிற்கும் உள்ள வித்தியாசம்தான்...

    !!!

    ReplyDelete
  2. என்தேச மக்களே!
    நாட்டின் மேல் அக்கறை கொண்டவர்களே!
    நாமும் அரசியல் மாற்றத்திற்காக முயற்சிப்போம்.அல்லது குறைந்த பட்சமாவது நம் வாக்குகளையாவது மாற்றம் தர வருபவர்களுக்கு ,வாக்களிப்போம்.''

    நல்ல கருத்து
    என் கருத்தும் அப்படியே
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete