Sunday 1 April 2012

கண்கள்!

உருவத்தை -
காட்டும்-
கண்ணாடி!

உள்ளத்தை-
பிரதிபலிப்பது-
"கண்ணே"-
நீ!
------------------
"அறிவாளிகளால்"-
மெகா வாட்டுக்கு-
வழி தெரியல!

அருளாளன் கொடுத்த-
மகா ஒளியினை-
விவரிக்க மொழியே-
இல்லை!
-------------------
நெஞ்சுல-
ஈரம் இல்ல!-
சிறைவாசிகளுக்கு!

ஈரம் குறைவது-
தெரியல-
கண்ணீரை வடித்த-
கண்களுக்கு!

நாட்டுல நீதிக்குதான்-
பாரபட்சம்-
தண்டனைக்குமா?

ஏன் இந்த- நிலை
சாமானிய-
மக்களுக்கு!?
-----------------------
பூ இதழ்களால்-
உடல்-பச்சிளம்
குழந்தை!

பூவில்-
ஒரு கரும் பூ-
கரு விழியே!

அரக்கத்தனம்-
செய்து கொண்டு!

போர் என்று-
சொல்லி கொண்டு!

ஒரு பாவமும்-
அறியாத மழலைகளை-
மடிய செய்து-
விட்டு!

புகை பட-
காட்சியிலோ-
பாவனை-
சிரித்து கொண்டு!

பூக்கள் என்ன?-
புற்கள் கூட முளைக்காது-
உங்கள் சாமாதிகளை-
சுற்றி கொண்டு!
-----------------------
மரங்கொத்தி-
பறவை!

கண் கொத்தி-
பாம்பு!

இவை இரண்டும்-
என்னவளின்-
கண்கள்!
-----------------
பார்வையை-
பறிக்க கூடியது -
மின்னல் ஒளி!

பட்டம் பெற்றவனும்-
மதுவில் மடியும்-
அறிவிலி !
--------------------
துச்சாதனன்-
கொடியவனாம்!

பாவம்-
பாஞ்சாலியாம்!

சேலையை இல்லாமல்-
நடிக்க வைப்பனும் !

அதுக்கும்-
விலை பேசி -
நடிப்பவளும்!

கண்ணுக்கு விருந்து-
என பார்ப்பவனும்!

இவர்களெல்லாம்-
யாராம்..!?
--------------------

12 comments:

  1. //இவர்களெல்லாம்-
    யாராம்..!?//

    கவிதையினூடே நல்ல கேள்வி!. அருமை!.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வரவுக்கும்-
      கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  2. நல்ல கவிதைகள் சீனி
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. செய்தலி!
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி!

      Delete
  3. பார்வையை-
    பறிக்க கூடியது -
    மின்னல் ஒளி!

    பட்டம் பெற்றவனும்-
    மதுவில் மடியும்-
    அறிவிலி !//
    அழகிய வரிகள் அருமை .

    ReplyDelete
    Replies
    1. சசிகலா!
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி!

      Delete
  4. Replies
    1. ayya!
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri ayyA!

      Delete
  5. கண் கண்ன்னு எல்லாம் சொல்லி நடுவில வீட்டுக்காரி கண்ணையும் கொண்டு வந்திருக்கிறீங்களே.யப்பா....சீனி.நீங்களே கவிஞர் !

    ReplyDelete
  6. தலைப்பும் இறுதிவரியும் பொருந்தக் கொடுத்த கவிதை
    மிக மிக அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ramani ayya!
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete