Saturday 16 June 2012

தோல்வி!



ஜல்லிக்கட்டில்-
பரிசு-
தொங்குவது-
கொம்பில் !

வாழ்வின் வெற்றி-
தொங்குவது-
தோல்வியில்!

சிராய்வுகளை-
சந்திக்க துணியாதவன்-
"களத்தில்"-
இறங்காதே!

தோல்விகளை-
தாங்க முடியாதவன்-
வெற்றி என்று கூட-
சொல்லாதே!
---------------------
தோல்வி!

ஒரு தெரு நாய்-
ஓடினால்-
துரத்தும்!

"உறுதியா" நின்றால்-
திரும்பி ஓடும்!
-------------------
ஆழ்கடலுக்கு-
செல்பவனுக்கே-
முத்துக்கள்!

கரையே கதியென்றால்-
தொட்டிட முடிந்தவை-
நுரைகள்!

அலைகளை -
தாண்டினால்தானே-
சிப்பி!

தோல்விகளை-
ஏற்றுகொள்பவனுக்கே
வெற்றி!
---------------------
வெற்றி பெற்றவனின்-
தோள்கள் தாங்கலாம்-
மாலைகள் !

அம்மாலைகளை-
ஒதுக்கி -
அவனது நெஞ்சத்தை-
கேட்டு பார் அது சொல்லும்-
பட்ட அவமானங்களை!
---------------------------
ஆயுதங்களை தரித்து கொண்டு-
மக்களை கொன்று-
குவிப்பது தோல்வியே!

நிராயுதபாணிகள்-
"முனங்கல்கள் "கூட-
நீதிக்கான-
வெற்றியே!
------------------------
வெற்றி ஊராரை-
மெச்சிடவும் வைக்கும்!
வஞ்சிடவும்-
வழி வகுக்கும்!

தோல்வி-
வாட்டத்தையும் தரும்!

வாழ்கை பாடத்தையும்-
கற்று தரும்!
----------------

24 comments:

  1. வாழ்க்கை ஒரு வட்டம்ங்கிற மாதிரி தோல்வி தான் ஒரு மனிதனை முன்னேற்றி அடுத்த படிக்கு இட்டு செல்கிறது, அந்த தோல்வியை எப்படி பார்க்கவேண்டும் என்ற இந்த வரிகள் அனுபவ வரிகளாய் தான் தோன்றியது வாழ்த்துகள் சகோ :)

    ReplyDelete
    Replies
    1. reva!
      ungal karuthukum-
      varavukkum mikka nantri!

      Delete
  2. தோல்வியில் நிதாநிப்பவன்
    கண்டிப்பா வெற்றி ருசிப்பன் சகோ

    நல்ல கவிதை சகோ

    ReplyDelete
    Replies
    1. seythali!
      ungal varavukku-
      mikka nantri!

      Delete
  3. தோல்வியே வெற்றிக்கு முதல் படி.!

    ReplyDelete
  4. Replies
    1. thanpalan!

      ungalin varavukku mikka nantri!

      Delete
  5. வெற்றி ஊராரை-
    மெச்சிடவும் வைக்கும்!
    வஞ்சிடவும்-
    வழி வகுக்கும்!

    தோல்வி-
    வாட்டத்தையும் தரும்!

    வாழ்கை பாடத்தையும்-
    கற்று தரும்!///
    யோசிக்க வைக்கிற வரிகள் அண்ணா! அருமை! தோல்வி வந்தா தான் வெற்றிய நோக்கின தாகம் அதிகம் ஆகும்!

    ReplyDelete
    Replies
    1. uvaraani!

      ungal varavukku mikka nantri!

      Delete
  6. வாழ்வின் வெற்றி-
    தொங்குவது-
    தோல்வியில்!

    அருமையாகச் சொன்னீர்கள் நண்பா.

    ReplyDelete
  7. அடடா....
    என்னமா எழுதுறீங்க....

    ReplyDelete
    Replies
    1. AROUNA!
      ungal varavukkum karuthukkum mikka nantri!

      Delete
  8. ஆயுதங்களை தரித்து கொண்டு-
    மக்களை கொன்று-
    குவிப்பது தோல்வியே!

    நிராயுதபாணிகள்-
    "முனங்கல்கள் "கூட-
    நீதிக்கான-
    வெற்றியே!

    மிக அருமையாகச் சொன்னீர்கள்
    அரசன் அண்று கொல்வான் தெய்வம்
    நின்று கொல்லும் என்பதுபோன்று
    பொருள் விளக்கி நின்றன இனிய
    கவிதை வரிகள் வாழ்த்துக்கள் .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. ampaaladiyaal!

      ungal muthal varavukkum karuthukkum mikka nantri!

      Delete
  9. எது வெற்றி எது தோல்வி சரியா சொல்லுது கவிதை

    ReplyDelete
  10. //தோல்வி!

    ஒரு தெரு நாய்-
    ஓடினால்-
    துரத்தும்!

    "உறுதியா" நின்றால்-
    திரும்பி ஓடும்!//

    உண்மை தான் நண்பா உற்சாகமூட்டும் வரிகள்

    ReplyDelete
  11. தோல்வி இல்லை துவக்கம் என்பதை உணர்த்திய விதம் அருமை .

    ReplyDelete
    Replies
    1. sasikala!

      mikka nantri!

      ungal blogger name enakku theriviyungal-
      nantri!

      Delete
  12. அட நண்பா நீ கவிதையெல்லாம் சொல்ல வேனாம்...நல்லா தத்துவம் சொல்லுற....:)

    இது நிச்சயமான உண்மைகள் நண்பா...தொடருங்கள்

    ReplyDelete