Tuesday 10 July 2012

மௌனங்கள்"!



கொட்டிய மழையின்-
அளவு தெரிந்திடும்!

பெய்திடாத-
மேகம்-
மனதில் கிலியை-
தந்திடும்!

சொல்லிய வார்த்தை-
அர்த்தம் தந்திடும்!

வார்த்தை சொல்லாத-
மௌனம்-
வருத்திடும்!

மௌனத்தின் -
மறு பெயர்!

அமைதி!

அமைதி!

அமைதி!

என்னவளின் -
அமைதி!-

என்னை விரட்டும்-
அணையா "தீ"!

அவள்-
"கத்தி"-
பிரயோகிக்கவில்லை!

நானும்-
"கத்தி"-
தொலையவில்லை!

ஏனோ !?
அவள் மௌனித்ததில்-
என் கண்கள்-
அயர்ந்திடவில்லை!
------------------------
ஊதாரி பேச்சி-
உருப்படாத பேச்சி!

ஆத்திரக்காரன் பேச்சி-
அரை புத்தி பேச்சி!

அறிவாளியின் மௌனமோ-
அறிவின் முதிர்ச்சி!
------------------------------
கடலின் அலை-
ரசனை தரும்!

கடலின் மௌனமோ-
புயலை தரும்!
------------------

மொட்டுக்கள் மௌனம்-
களைவது-
மலர்வதற்கு!

மலைகள் மௌனம்-
களைவது!-
நில சரிவிற்கு!

பனி மலை மௌனம்-
களைவது-
கடல் மட்டம்-
கூடுவதற்கு !

அநீதியை கண்டும்-
பொங்கிடாதவன்-சமம்
பிணத்திற்கு!
-------------------
யோகியின் -
மௌனம்-
தியானம்!

"தியான பீடத்தில்"-
தீஞ்ச வாசம்-
காமம்!
------------------


19 comments:

  1. வார்த்தை சொல்லாத-
    மௌனம்-
    வருத்திடும்!

    பொங்கிய மௌனங்கள் கவிதையாய் !!

    ReplyDelete
  2. //"தியான பீடத்தில்"-
    தீஞ்ச வாசம்-
    காமம்!//

    இறுதியில் நீங்கள் வைத்த பஞ்ச் சூப்பர்

    ReplyDelete
  3. //கடலின் அலை-
    ரசனை தரும்!

    கடலின் மௌனமோ-
    புயலை தரும்!//
    ஆழமான உணவுகளை
    அழகாக
    வரிசைபடுத்தியிருகிரீர்கள் .........

    அருமை

    ReplyDelete
    Replies
    1. saralaa!

      ungal muthal varavukkum karuthukkum mikka nantri!

      Delete
  4. மௌனங்களின் மெளனம்

    நல்லா இருக்குங்க

    ReplyDelete
  5. நண்பா, கொஞ்சம் உங்க ஸ்பேம் பொட்டியில உள்ள நம்ம கமாண்டை ரீலீஸ் பண்ணவும்

    ReplyDelete
  6. நல்லதொரு கவிதை... வரிகள் அருமை... முடிவில் நச்... தொடர வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  7. வழக்கம் போல் செம..!

    ReplyDelete
  8. please check spam box and release my comment

    ReplyDelete
  9. வழமையான வரிகள்.......தொடருங்கள் நண்பா

    ReplyDelete
  10. மௌனம் இங்கே பன்மொழி பேசுகிறது நண்பரே...

    ReplyDelete
  11. கொட்டிய மழையின்-
    அளவு தெரிந்திடும்!

    பெய்திடாத-
    மேகம்-
    மனதில் கிலியை-
    தந்திடும்!

    சொல்லிய வார்த்தை-
    அர்த்தம் தந்திடும்!

    வார்த்தை சொல்லாத-
    மௌனம்-
    வருத்திடும்!

    மௌனத்தின் -
    மறு பெயர்!

    அமைதி! அமை தீ அருமையான வரிகள் சகோ...

    ReplyDelete