Friday 24 August 2012

நாலாவது தூண்!



பத்தி பத்தியா-
எழுதுவதா!?


'பத்த ' வைக்க-
எழுதுவதா!?

அநீதியை -
எதிர்க்கவா!?

அரை நிர்வாண -
படங்களை -
வெளியிடவா!?

கருமை படிந்த வாழ்வு கொண்ட-
மக்கள் இங்கே-
எத்தனையோ!?

இதில் -
'மஞ்சள்' நிற-
கதையோ!?

மை கொண்ட-
பேனாவின் எழுத்துக்களா!?

கொஞ்சமாவது-
மனசாட்சியை தொட்டு-
எழுதுகிறோமா!?

சந்தேக நபர்கள்-
'உள்ளேயும்'!

'சம்பந்தப்பட்ட ' நபர்கள்-
'வெளியேயும்!'

ஊடகங்கள் -
ஒண்ணுமே தெரியாதது-
 மாதிரியும்!

புலன்விசாரணை-
என்கிற பெயரிலே!

ஏன் புளுகு மூட்டை-
செய்திகளே!

ஜனாநாயகத்தின்-
நாலாவது தூண்!

ஏன் ஆனது-
வீண்!

''மக்களை பிளவுபடுத்துகிறது''!
''வெறுப்புகளை விதைக்கிறது!''

''குண்டு வெடித்த உடனேயே-
முஸ்லிம்கள் மீது வீண்பழி-
சுமத்துகிறது!''

''குறுஞ்செய்தி வருகிறதாம்!''
''மின்னஞ்சல் வருகிறதாம்!''

இவைகளெல்லாம்-
ஆதாரமாம்!?

''குறி'' இட்ட செய்திகளெல்லாம்-
பிரஸ் கவுன்சில் தலைவர்-
முன்னாள் நீதபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்-
பேட்டியின்போது கேட்டது-
இவையெல்லாம்!

எப்படியும் -
வெளியேறாமல் -
விடுவதில்லை-
எரிமலை!

எங்காவது -
ஒருவரிடத்திலாவது-
வெளிவரும் -
உண்மைகளே!

''சஞ்சீவ் பட்'-
போல!

இன்னும் எத்தனை பேர்கள்-
உண்மையை சொல்வார்களோ !?

இன்னும் படிக்க!
இங்கே அழுத்துங்க!

வலைச்சரத்தில் இன்றைய பதிவு!




3 comments:

  1. // எப்படியும் -
    வெளியேறாமல் -
    விடுவதில்லை-
    எரிமலை!

    எங்காவது -
    ஒருவரிடத்திலாவது-
    வெளிவரும் -
    உண்மைகளே! // உண்மை வரிகள்.

    ம். வலைச்சரம் செல்கிறேன்.
    தொடருங்கள்.

    ReplyDelete