Tuesday 18 September 2012

காதலெனும் தேர்வில்..(3)

 வந்து விட்டது-
பேருந்து நிலையம்!

கொஞ்ச தூர-
நடை பயணம்!

தேநீர் கடை-
அருகில் அமர்வு!

"விருந்து"நடத்திட-
அவ்விடமே தேர்வு!

அவ்விடம்-
ஒரு முச்சந்தி!

தப்பிக்கலாம்-
"பிரிச்சி மேஞ்சி!"

ஒரு வேளை-
மாட்டிகொண்டால்!?

புழல்-
சிறைதான்!

வாழ்வோ -
சாவோ-ஒருவனுடனே-
போய் விடுமே!

ஒரு சமூகத்தின் மேல்-
பழி போட-"இஸ்மாயில் "என-
பச்சை குத்தி-
காந்தியை கொன்ற -
நாதுராம் கோட்சே-
நானில்லையே!

மக்கள்-
சுதாரித்து-
விட்டால்!?

நம்ம நாடு-
என்னைக்கோ-
ஏமாற்றுபவர்கள் கையில்-
இருந்து -உருப்பட்டு இருக்குமே!-
அவர்கள் சுதாரித்து-
இருந்தால்!

ஆழ்கடலில் தோன்றும்-
அலைகள் -கரையில்-
வெளியேறுவது போல!

மனதில் கேள்வியும்-
பதிலும் -மாறி மாறி-
தோன்றியது-
அது போல!

ஒரு தேநீரும்-
இரண்டு போண்டாவும்-
காலை பசியை-
போக்க!

நடத்த வேண்டிய-
"ரத்த களரி"-
என் கோபத்தை-
போக்க!

சாலையோரம்-
செத்து கிடந்தது-
தாய் நாய்!

அது இறந்தது-
தெரியாமல்-பால்
குடிக்க முயலும்-
குட்டி நாய்!

அச்சோகத்தை-
பார்த்து கொண்டு-நான்
தேநீர் அருந்தியவனாய்!

நேரம் நெருங்கியது-
அவள் என் முதுகுபுறமாக-
வந்து- காய் கறி-
வாங்க போகிற-
இடம் அது!

தூரத்தில் அவள்-
கூட்டத்தினூடே-
வருவது-
தெரிந்தது!

அவள் நெருங்குவதை-
உணர்த்தியது-யாருடனோ-
பேசிகொண்டுவருவது!

நான் ஏதுவாக-
திரும்பி தயாராவதுதான்-
நல்லது என-
மனதிற்கு பட்டது!

"அடச்சே"-என
அவளின் சப்தம்!

ஒரே நிசப்தம்!

திரும்பி பார்க்கிறேன்-
சாணியை மிதித்து விட்டாள்!

அவளின் கணவன்-
தண்ணீர் ஊற்றினான்-
கழுவிட-
காலில்!

ஆனால்-
ஆனால்-
அவளுக்கு குழந்தை-
இருக்கிறது!

அச்சு அசலாக-
அவளை போன்றே-
இருக்கிறது!

திரும்பிய என்னை-
பார்த்து-பால் புட்டியை-
காட்டி வேணுமா!?-என
சைகை காட்டி-
சிரிக்கிறது!

பாறைக்குள்ளும்-
ஒளிந்திருக்கும்-
நீர் வெளிவருவது-
போல்!

நீண்ட இடைவெளிக்கு பின்-
என் கல் மனசில்-
ஈரம் கசிந்திட செய்தது-
அக்குழந்தையின் -
சிரிப்பு போல!

என் திட்டத்தை-
செயல்படுத்த முடியாமல்-
திகைத்து நின்றேன்!

என்னை "அவர்கள்"-
கடந்து போனதை-
பார்த்து கொண்டிருந்தேன்!

மெல்லியவளாக-
இருந்தவள்!

சற்று பருத்து -
இருக்கிறாள்!

என்னை அவளுக்கு-
அடையாளம்-
தெரியவில்லை -
போலும்!

கொஞ்ச தூரம்-
போனவள்-
திரும்பி என்னை-
பார்த்தால்-உள்ளுணர்வு
தட்டிருக்கும் போலும்!

எனது-
நிலையோ...!?

படிக்க-
 பொறுங்க-
அடுத்த பதிவை!

(தொடரும்....)




28 comments:

  1. என்னவே சஸ்பென்ஸ் கொடுக்கிறீங்க?மிஸ் ஆயிட கூடாது...உடனே அடுத்த சீனி கவிதை அவசியப்படுகிறது.

    ReplyDelete
  2. நல்ல விறுவிறுப்பு

    இடை இடையே சுருக்குன்னு....வரிகள்

    ReplyDelete
  3. அழகான கவிதை.......

    ReplyDelete
  4. நறுக் வரியில் அழகிய கவிதை.

    ReplyDelete
  5. உள்ளுணர்வு தட்டத் தான் செய்கிறது வரிகளில்.

    ReplyDelete
  6. கவிதையிலும் கதையா...? சூப்பர்! அடுத்த பாகத்திற்கு வெய்டிங்! :)

    ReplyDelete
  7. இதன் ஏனைய பாகங்களையும் முழுமையாக படித்தேன் அருமை! தொடருங்கள்!

    ReplyDelete
  8. அழகான கவிதை....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  9. சீனு ,எப்படி இருக்கீங்க ....ப்லோக்ஸ் லாம் சூப்பர் ஆ இருக்கு ....ரொம்ப நல்லா கவிதை வந்து இருக்கு ....உங்களோடு எழுத ஆரம்பிச்சேன் ல ..இன்னும் என்னோட எழுத்து அப்படியே தன் இருக்கு ...மோசமா தான் போயிருக்கு ...நீங்க கிரேட் சீனு ...முன்னடிக்கும் இப்பக்கும் செம இம்ப்ரோவேமென்ட் ...கலக்குறிங்க ...இன்னும் நிறைய எழுதி பெரிய ஆளாக வாழ்த்துக்கள் ...

    வலைசரம் லாம் ஆசிரியர் ஆனத பார்த்தேன் ..வாழ்த்துக்கள் சொல்ல முடியல நேரம் நெட் எதுவும் இல்லை ...அவ்ளோ சந்தோசமா இருஞ்சி நீங்க ஆசிரியர் ஆனது ....வாழ்த்துக்கள் சீனு ...

    ReplyDelete
    Replies
    1. kalai sako..!

      enge poneenga...!?

      nalamaa!?

      ungalathu pinnoottam thevai-
      ennai pontravanukku!

      vanthamaikku mikka nantri!

      Delete
  10. என்னட கவிதையும் வலையில் அறிமுகபடுத்தியதுக்கு நன்றி சீனு ....

    ReplyDelete
  11. மேலும் விறுவிறுப்பு கூடுகிறது...

    ReplyDelete
  12. உள்ளுணர்வோடு பேசிக்கொள்ளும் காதல் நகர்கிறது.காத்திருப்பு எங்களுக்கும்தான் சீனி !

    ReplyDelete
  13. தொடருங்கள் நண்பரே இடையில் வரலாறும் குறுக்கீடு செய்துள்ளது அருமையான செயல்

    ReplyDelete
  14. அருமை...

    mmmmm...

    ReplyDelete
    Replies
    1. mokan!

      ungal muthal varavukku-
      mikka nantri!

      Delete