Thursday 9 May 2013

பெண்ணினம்...!(13)

இன்றைய-
காலம்!

விஞ்ஞான -
உலகம்!

சாமானியர்களுக்கும் -
பயன்படும்-
சமூக தளங்கள்!

தளங்களையும்-
தள்ளாட வைக்குது-
அவலங்கள்!

கிடைக்கபெறும்-
அறிய தகவல்களும்!

கேட்காமலே வரும் -
அசிங்கங்களும்!

சமூகதளத்தின்-
இரு முனைகளாகும்!

நடக்கிறது-
கருத்து மோதல்களும்!

அதில்-
ஆழமான-
கருத்துக்கள்-
கொஞ்சம்!

கெட்ட வார்த்தைகள்-
அதனை-
மிஞ்சும்!

சாதி துவேசம்!
மத துவேசம்!

களையப்படும்-
பலரது-
வேஷம்!

அதனால்-
தொழில் நுட்பத்தை-
விடணுமா!?

இல்லை-
தொடரனுமா!?

தேர்தல் களத்தையே-
மாற்ற கூடியது-
சமூகதளங்கள்-
சொல்லுது-
ஆய்வு!

நாம்-
அடையவேண்டியது-
இதனை பற்றிய-
தெளிவு!

விஷத்திலும்-
மருந்துண்டு!

மருந்திலும்-
விஷமுண்டு!

எதனை-
தேர்ந்தெடுக்கணும்-
நமக்கே-
பங்குண்டு!

(தொடரும்...)





3 comments:

  1. ///விஷத்திலும்-
    மருந்துண்டு!

    மருந்திலும்-
    விஷமுண்டு!///

    நிதர்சனமான வார்த்தைகள் ..
    தொடருங்கள்..

    ReplyDelete
  2. அருமையாக முடித்துள்ளீர்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தெரிவு நம் கையில் ஆய்வு சொல்லும் நிஜம் சகோ! தொடருங்கள் சகோ!

    ReplyDelete