Saturday 11 May 2013

பெண்ணினம்..!(15)

பூவையர்கள்-
வலைபூக்களில்-(blogspot )
வலம் வருகிறேன்!

அவர்களின்-
கதைகளில்-
கவிதைகளில்-
கரைந்திருக்கிறேன்!

அச்சகோதரிகளின்-
சிந்தனைகளில்-
சற்று "சரிந்தே-"
போயிருக்கிறேன்!

"அருமை"-என்ற
ஒற்றைவார்த்தையில்-
கருத்திட்டுருக்கிறேன்!

கருதிட -
சிந்திக்க முடியாமல்-
தப்பித்து இருக்கிறேன்!

சில சகோதரிகள்-
புகைப்படங்கள்!-
பகிர்வதில்லை!

அதனால்-
அவர்களின்-
வரிகளில்-
திறமைகள்-
தெரியாமலில்லை!

ஆடை குறைப்பு-
சர்வசாதாரணமான-
ஒரு-
நாட்டில்!

புகார் அளித்தாள்-
ஒரு பெண்-
காவல்துறையில்!

அவளது-
பழைய படங்கள்-
"உலாவருகிறதாம்"-
இணையத்தில்!

அதிர்ந்தார்-
ஆந்திராகாரர்-
படித்ததும்!

தன்-
மகள் -
இறந்துவிட்டதாக-
இணையத்தில்-
"படம்"-
வெளிவந்ததும்!

"டெல்லி மாணவி"-
படமாக-
அவரது-
மகள் படம்-
இணைக்கபட்டிருந்தது!

அதுவே-
அலறலுக்கு-
காரணமாக-
இருந்தது!

தற்கொலை செய்து -
சுஸ்மிதா எனும் பெண்-
ஆனார்-
சடலமாக!

ஆம்-
அப்பெண்ணின் படம்-
சித்தரிக்கபட்டிருந்தது-
விலை மாதர்களாக !

இனி-
"வலம்" வருவோம்-
சென்னையை!

அறியலாம்-
ஒரு அதிர்வலையை!

(தொடரும்....)


2 comments:

  1. சென்னையா...?

    தொடருங்கள்...

    ReplyDelete
  2. உணர்வுகளும் செய்திகளும்
    கலந்த கவிதை...
    தொடருங்கள்..

    ReplyDelete