Sunday 12 May 2013

பெண்ணினம்...!(16)

படிப்பு என்பது-
படித்தவரை-
பண்படுத்த வேண்டும்!

"களி மண்ணையும்"-
உபயோகமாக்கணும்!

ஆண்கள் கல்வி-
பூச்செடிகள் மீது-
தெளிக்கும்-
நீராகும்!

பெண்கள் கல்வி-
செடிகளின் -
வேர்களில் ஊற்றும் -
நீராகும்!

ஒரு தலைமுறையே-
உருவாக்கும் -
இடம்-
தாயின்-
மடியாகும்!

ஓ!
பட்டங்கள்-
படித்தவர்களே!

படிப்பவர்களே!

உங்கள்-
பட்டங்களின்-
எழுத்துகள்!

உங்கள்-
ரத்த உறவுகளின்-
வியர்வையும்-
இளமையாகும்-
அவைகள்!

பெண்ணவள்-
தூத்துக்குடியை-
சேர்ந்தவள்!

சென்னை-
"வந்து-"
சேர்ந்தவள்!

மேற்படிப்பு-
தயாரிப்புக்காக!(புரோஜெக்ட் )

இருந்திருக்கலாம்-
படிப்பில்-
கண்ணும்-
கருத்துமாக!

முக நூல்-(பேஸ் புக்)
வாயிலாக-
கிடைத்தான்-
ஆண் நண்பன்!

பெயர்-
கோகுல கிருஷ்ணன்!

அவனே-
அவளின்-
கற்புக்கு-
எமன்!

"சூறையாடி "விட்டு-
"கட்டி கொள்வதாக-"
"சூறையாடினான்"!

ஆனால்-
தனியாக-
வேறு "குடும்பம்"-
ஒன்றையும்-
நடத்தினான்!

இப்போது-
இருக்கிறாள்-
கண்ணீரும்-
கம்பலையுமாக!

புகாரளித்தால்-
இவ்வாறாக!

ஓ!
பெண்களே!

ஏன் தான்-
எவனையோ-
நம்பி-
ஏமாந்து-
போறீங்களோ!?

(தொடரும்....)

//நன்றி தினக்ஸ் வலைத்தளம்.
முழுவதும் படிக்க.
இங்கே போங்க....!//






2 comments:

  1. எல்லாம் தெரிந்தும் ஏமாந்து போகிறார்கள் பெண்கள்! இது அவர்கள் பலவீனமா என்று புரியவில்லை! நன்றி!

    ReplyDelete