Monday 13 May 2013

பெண்ணினம்...!(17)

இன்றைக்கு-
பெண்ணுரிமை -என
சொல்வதெல்லாம்-
பெண் சுதந்திரமா!?

இல்லை-
ஈயம் பித்தாளைக்கு-
பேரீச்சம் பழமா!?

"படிச்சவர்னு"-
தெரிவதற்கும்!

"இறுக்கமா"-
"தெரிய "-
ஆடை -
அணிவதற்கும்!

என்ன-
தொடர்பிருக்கு!?

சொல்வதுண்டு-
"அடைத்து வைப்பது"-
முட்டாள் தனமாக!

அடங்காமல்-
அலைவது மட்டும்-
இருக்கிறதா-
அறிவுத்தனமாக!?

பேச்சில் கிழிக்கிறோம்-
ஒழுங்கான-
உடையை-
பட்டிகாட்டு தனமாக!!

ஒழுங்கங்கெட்ட-
ஆடை மட்டும்-
பறைசாற்றுகிறதா-
"பட்டம் "-
பெற்றதாக!?

அன்று-
அறிந்தது-
ஆள் பாதி-
ஆடை பாதி!

இன்றைக்கு-
அணிவதே-
பாதி!

அதிலும்-
கிழிஞ்சி தொங்குது-
மீதி!

அதற்காக-
படி கட்டை-
 தாண்டாதே-என
சொல்ல வரவில்லை!

அடுப்படியில்-
"கரிகட்டையாக-"
சொல்ல வரவில்லை!

"வெளி திண்ணைக்கு"-
வரவிடாமல்-
"விலக்கி" வையின்னு-
சொல்ல வரவில்லை!

ஆனாலும்-
பெண்மையின்-
"தன்மையை"-
அறிய வேண்டியது-
இன்றைய நிலை!

வரும் முன்-
காப்பது-
நல்லது தானே!

"வந்த பின்"-
அழுவது-
வீணே!

(தொடரும்....)





2 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. "படிச்சவர்னு"-
    தெரிவதற்கும்!

    "இறுக்கமா"-
    "தெரிய "-
    ஆடை -
    அணிவதற்கும்....

    எனக்கு பிடித்த வரிகள் மிக அருமை

    ReplyDelete