Tuesday 21 May 2013

பெண்ணினம்...! (24)

தேக தேவையை-
தீர்த்து கொள்ளும்-
தேவையில்லாதவர்களையோ!

காதல் எனும் பேரில்-
காம வேட்டை-
நடத்துபவர்களையோ!

குடும்ப கண்ணியத்தை-
குலைக்கும்-
கள்ள காதலர்களையோ!

மனம் ஒத்தால்-
சேர்ந்து வாழும்-
மானம் கெட்டவர்களையோ!?

எழுதுவது-
தேவையோ!?

இப்படியாக-
எப்படியோ-
வாழும்-
பலர்!

ஆனால்-
இப்படிதான் -
வாழனும் என-
நினைத்த சிலர்!

நோயாலோ!
விபத்தாலோ!

சில பல-
காரணத்தாலோ!

"துணைகளை-"
இழந்தாலே!

மிச்சவாழ்வையும்-
கழிக்கனுமா-
கண்ணீராலே!

"தப்பு-"
செய்பவர்கள்-
தண்டிக்கபடகூடியவர்கள்!

முன்னே-
கூறியவர்கள்!

தப்பில்-
விழாமல்-
தடுக்கப்பட கூடியவர்கள்!

பின்னே-
கூறியவர்கள்!

(தொடரும்...)




2 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்... தொடருங்கள்...

    ReplyDelete
  2. பெண் பற்றி நுணுக்கமான பார்வைகள். நன்று

    ReplyDelete