Saturday 25 May 2013

பெண்ணினம்...! (27)

ஒன்றுக்கும் மேல்-
"துணை "-
தேவையானால்!

உடல் பலமும்-
செல்வ பலமும்-
இருக்குமானால்!

"முதலுக்கு"-
மோசம் இல்லாமல்-
இருந்திட-
முடியுமானால்'

"வரவிற்கும்"-
"நட்டம் " இல்லாமல்-
நடந்திட-
முடியுமானால்!

இன்னொரு தாரம்-என
நான்கு மனைவிகள் வரை-
மணக்கலாம்!

இல்லைஎன்றால்-
ஒன்றோடு இருந்திடலாம்!

இதுவே-
இஸ்லாமிய சட்டமாகும்!

இது-
கட்டாயம்-
இல்லை!

அனுமதியை-
மட்டுமே தவிர-
வேறில்லை!

இதில்-
கள்ள உறவு-
இல்லை!

பிள்ளைக்கு-
அப்பன் பேர்-
தேட வேண்டியதில்லை!

"மண ஒப்பந்தம்-"
நடந்தால்தான்-
உறவாட முடியும்!

"விவகாரத்து"-
வேண்டுமானாலும்-
சட்டப்படியே-
"முடிக்க" முடியும்!

"தப்பான"-
உறவுகள்-
சொல்லிகொள்கிறார்கள்-
பெருமையாக!

"பாதுகாப்பான"-(பலதார மணம்)
திருமணத்தை-
தூற்றுகிறார்கள்-
கொடுமையாக!

நீங்களே-
எண்ணிப்பாருங்கள்!-
எத்தனை முஸ்லிம்கள்-
"ஒன்றுக்குமேல்"-
மணம் முடித்துள்ளார்கள்!?

ஒவ்வொரு ஊரிலும்-
விரல் விட்டு-
எண்ணிடலாம்-
அவ்வளவு -
குறைவானவர்கள்!

இன்னும் -
இதனை-
விளக்க முடியும்!

ஆனாலும்-
நிறுத்துகிறேன்!
காரணம்-
கவிதை நீண்டிடும்!

(தொடரும்...)

//இன்னும் நீங்கள் அறிந்திட இரு புத்தகங்கள் சொல்கிறேன்.
முடிந்தால் வாங்கி படியுங்கள்.

புத்தக பெயர்;இஸ்லாம் எளிய அறிமுகம்.
ஆசிரியர்;நாகூர் ரூமி.
வெளியீடு.கிழக்கு பதிப்பகம்.

மற்றொண்டு-
புத்தக பெயர்; உங்கள் இதயத்துடன் இஸ்லாம் பேசுகிறது.
ஆசிரியர்;மன்சூர்.
வெளியீடு;இலக்கியசோலை//



1 comment:

  1. நல்லதொரு நூல் அறிமுகம்.... தொடருங்கள்....

    ReplyDelete