Sunday 26 May 2013

பெண்ணினம்...! (28)

பெண்ணினமே!

மாறவேண்டியது-
உன் மனமே!

இவ்வுலகில்-
ஆணெல்லாம்-
மோசம் இல்லை!

ஆனாலும்-
எல்லோரும்-
நல்லவர்கள் இல்லை!

ஆன்மிகவாதி!
அரசியல்வாதி!

முனைவர்கள்!
முட்டாள்கள்!

இதிலில்லாமல்-
இன்னும்-
எத்தனை பேர்கள்!?

அன்று-
நடந்தது-
பெண்ணை-
சீரழித்தது-
மானபங்கத்தால்!

இன்று-
நடக்கிறது-
சிறுமிகளும்-
சீரழிகிறதே-
பலாத்காரத்தால்!

பரமக்குடியில்-
ஏழுவயது-
சிறுமி!

நெல்லை மாவட்டத்தில்-
பதினான்கு வயது-
சிறுமி!

இப்படியாக-
தொடர்கிறதே-
செய்தி!

எனக்கோ-
படிக்கும்போதெல்லாம்-
நெஞ்சுக்குள்-
தீ!

சிறுமிகளையே-
சீரழிக்கும்-
நாய்கள்-
பெருகி விட்டன!

இளம்பெண்களே-
உங்கள் பாதுகாப்புதான்-
என்ன!?

உங்களை-
நீங்களே!
பாதுகாக்கணும்!

ஆதலால்-
"அனைத்து விசயங்களிலும் -"
எச்சரிக்கையாக -
இருக்கணும்!

எல்லா ஆணிலும்-
பெண்ணிலும்-
இச்சை எனும்-
வெறி நாய்-
இருக்கு!

எப்போது-
வேண்டுமானாலும்-
"பசி"தீர்க்க-
இருக்கு!

அந்நியரிடம்-
"நெருங்காமல்"-
இருப்பது-
நலம்!

எல்லோரையும்-
நம்பினால்-
மிச்சம்-
அவமானம்!

முடிவு-
உங்களிடம்!

வேறு -
சொல்ல என்ன-
இருக்கு-
என்னிடம்..!!

-----முற்றும்-------

// சிறுமிகள் விவகாரங்கள் முக நூலில் கனி என்பவர் பகிர்ந்திட்ட செய்தி.//
// இக்கவிதை தொடரின் சிந்தனைக்கு புள்ளியாக இருந்தது சகோதரி ஆலியா என்பவர்.
அவருக்கும் மிக்க நன்றி//





4 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. சரியான கருத்து.....

    விடுமுறை மற்றும் பயணத்தில் இருந்தமையால் மற்ற பகுதிகளை படிக்க இயலவில்லை. படித்து விடுகிறேன் விரைவில்......

    ReplyDelete
  3. ஆதலால்-
    "அனைத்து விசயங்களிலும் -"
    எச்சரிக்கையாக -
    இருக்கணும்!மிகச்சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  4. அருமையாக நிறைவு செய்தீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete