Friday 3 May 2013

பெண்ணினம்...! (7)

வாட்டிடும்-
வறுமையாலே!

ஒதுக்கிடும்-
உறவுகளாலே!

"கரை சேர்க்கணும்"-என்ற
அவசரத்தினாலே !

யானை பாதத்தில்-
அகப்படும்-
பழத்தை-
போல!

கிடைத்த-
வரனிடம்-
தள்ளி விடுகிறார்கள்-
ஆற்றில் படகை-
போல!

இப்படியாக-
சிலர்!

"இப்படியுமாக"-
சிலர்!

பணம் இருக்கும்-
மமதையிலே!

காசை -
கரைப்பார்கள்-
பந்தாவிலே!

நம்பி-
கெடுவார்கள்-
வெளிநாட்டு மாப்பிள்ளை-என்கிற
ஒத்தை வார்த்தையிலே!

கல்யாணம்-
செய்து வைத்தார்கள்-
பெற்றோர்கள்!

வெளிநாட்டுக்கு-
மகள் போய் விடுவாள்-என்ற
கனவுகள்!

நம்பி கழுத்தை-
நீட்டினால்-
பெண்ணொருத்தி!

கணவனோடும்-
கனவோடும்-
இருந்தவளை-
சுமந்து சென்றது-
வான ஊர்தி!

பின்புதான்-
அறிந்தாள்-
நடக்கும்-
"அநியாயங்கள்"!

எதிர்ததற்கு-
விழுந்தது-
அடிகள்!

திருமண-
புகைபடத்தில்-
இருந்தாள்-
புத்தம் புது-
மலராக!

பத்திரிக்கை-
பேட்டியின்போது-
இருந்தாள்-
பொசுங்கி போன-
விறகாக!

எத்தனை-
பலிகள்-
பழிகள்!

பெண்ணை-
சுற்றும்-
வலைகள்!

அதில் முக்கியமாக-
காதல்.....!!

(தொடரும்...)

// "அநியாயங்கள்" என்று குறிப்பிட்டது .வார்த்தையில் சொல்லமுடியாத விஷயம்.ஆதலால் அதனை விளக்கவில்லை//





3 comments:

  1. பெண்களின் வலிகளை உணர்த்தும் அருமையான கவிதை! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  2. hai seenu,eppadi irukeenga..kavithai nalla irukku ...


    romba mattrangal eluthula ...nalla maari irukku ...supperaa eluthuringa ....

    ReplyDelete
  3. காதல்...!!

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete