Sunday 5 May 2013

பெண்ணினம்...! (9)

"காணவில்லை"-
தன் மகளை-
தேடுகையில்!

காதிற்கு-
வருகிறது-
காதல்-
கதைகள்!

நொந்த-
மனங்கள்-
முனைவதில்லை-
வழக்கு-
பதிவில்!

முடித்து -
கொள்கிறார்கள்-
மனதோடு -
மாய்ந்து-
கொள்கிறார்கள்-
"முடிந்து "விட்டதாக-
எண்ணத்தில்!

ரத்தத்தை-
பாலாக-
ஊட்டிய தாய்!

தகப்பன்-
உழைத்தே-
உடைந்து -
போனவனாய்!

கிழித்து-
தொங்கவிடுவதாக-
இருக்கும்-
உறவுகளின்-
சொற்களாய்!

வேலியில் இருந்த-
பூந்தோட்டம்!

பாதுகாக்கப்பட்ட-
பெட்டகம்!

போகிறாள்-
எண்ணிக்கொண்டு-
ஒருவனையே-
சொந்தமாக!

கிடைத்ததில்-
படரும்-
கொடியாக!

போகிறவர்களின்-
வாழ்வில்-
மணம் வீசுமா!?

மானங்கெட்டதாக-
"வீசுமா"!?

"உண்ட பின்"-
எறியப்படும்-
இலையாகுமா!?

ஆக்கப்படுமா-!?
"விற்பனை"-
பண்டமா!?

ஆளில்லாத-
இடத்தில-
"புதை"படுமா!?

தெரியவில்லை!

தெரிந்துகொள்ள-
யாரும் முயல்வதில்லை!

சொல்கிறேன்-
சமீபத்தில்தான்-
நான் கண்ட-
சம்பவம்!

உங்களையும்-
காரி உமிழ-
வைக்கும்...!!

(தொடரும்...)






2 comments:

  1. உண்மை சம்பவங்கள் தரும் படிப்பினை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete