Tuesday 1 October 2013

காந்தி ஜி அவர்களே...!!

மகாத்மாவே-
நலமா!?

சுதந்திர போராட்ட-
உயிர்த்தியாகிகளெல்லாம் -
சுகமா!?

எப்படி-
நலமாக-
இருப்பீர்கள்!?

நாட்டின் -
நிலையறிந்து-
"வெம்பி "-
இருப்பீர்கள்!!

மற்ற தியாகிகள்-
வெள்ளையனால்-
பலியானார்கள்!

நீங்களோ-
ஒரு துரோகியால்-
"பொலி"-ஆனீர்கள்!

அதனையும்-
முஸ்லிம்கள் மேல்-
பழி போட-
முனைந்தார்கள்!

துப்பப்பட்ட -
தோட்டா(கோட்சே)-
தண்டனைக்குள்ளானது!

துப்பாக்கியும்-
மிச்ச தோட்டாக்களும்-
ரத்த வெறியில்-
அலைகிறது!

பயமில்லாமல்-
இரவில் பெண் -
நடந்தாலே-
முழு சுதந்திரம்-
என்றீர்கள்!

இன்று-
பட்டப்பகலிலேயே-
பச்ச குழந்தைகளையும்-
பிச்சி எறிகிறது-
"நர"மாமிச பட்சிகள்!

மது -
கூடதென்றீர்கள்!

தெரு தெருவுக்கு-
மதுக்கடைகள்-
இருக்கிறது-
போங்கள்!

உங்கள்-
கொள்கைகளை-
மறந்துவிட்டார்கள்!

உங்கள்-
பிறந்த நாளை மட்டும்-
கொண்டாடுவார்கள்!

மிட்டாயெல்லாம்-
கொடுக்கிறார்கள்!

இல்லை-
இல்லை-
"அல்வா"-
கொடுக்கிறார்கள்!





5 comments:

  1. //உங்கள்-
    கொள்கைகளை-
    மறந்துவிட்டார்கள்!

    உங்கள்-
    பிறந்த நாளை மட்டும்-
    கொண்டாடுவார்கள்!// உண்மை, கொள்கைகைகளை வைத்து என்ன செய்வார்கள் பாவம், பிறந்தநாளை வைத்து ஒரு விடுமுறை ஏற்படுத்திக் கொண்டு கொள்கையில்லாமல் திரிவர்...
    அருமையான கவிதை சீனி அவர்களே!

    ReplyDelete
  2. மிட்டாயெல்லாம்-
    கொடுக்கிறார்கள்!

    இல்லை-
    இல்லை-
    "அல்வா"-
    கொடுக்கிறார்கள்!//


    அற்புதமாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. /// அல்வா கொடுக்கிறார்கள்...///

    சரியாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete
  4. அல்வா கொடுக்கிறார்கள்....

    :((((((

    ReplyDelete
  5. //துப்பப்பட்ட -
    தோட்டா(கோட்சே)-
    தண்டனைக்குள்ளானது!

    துப்பாக்கியும்-
    மிச்ச தோட்டாக்களும்-
    ரத்த வெறியில்-
    அலைகிறது!//

    எதார்த்தமான வார்த்தைகளில் உண்மையான,ஆழமான கருத்துக்கள்.

    துப்பாக்கிகள் தோட்டாக்களுடன்,முஸ்லிம்களை நோக்கி குறிவைக்கப்படுகின்றன..முடிவு என்னவோ ??????

    ReplyDelete