Thursday 26 June 2014

வாசங்கள்..!!

பெருநாட்களின்
புதுச்சட்டை  வாசம்!

பள்ளிகூட காலங்களில்
கடந்துப்போன
சீகக்காய் வாசம்!

தேங்காய் சோற்றில்
கருவாட்டு ஆனத்தின் (குழம்பு )வாசம்!

முத்தமிட்ட
ஆச்சாவின் (பாட்டி) வெத்தலை வாசம்!

குழந்தை முகத்தில்
தாய்ப்பால் வாசம் !

மழைக்கால
மண் வாசம்!

மாலை நேர
மல்லிகை வாசம்!

நேசங்கள் மட்டுமா..!?
பாசத்தை சொல்கிறது !

இப்படியாக
வாசங்களும்தான்
நேசங்களை நினைவூட்டுகிறது !

         

3 comments:

  1. வாசங்களும் நேசத்தை நினைவூட்டுகிறது! சிறப்பாய் சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஒவ்வொரு வாசமும் நேசத்தின பறைசாற்றுமே......

    நல்ல கவிதை.

    ReplyDelete