Saturday 28 January 2012

என்னவளே...

குறைத்து விட்டேன்!-
சிலுப்பி கொண்டிருந்த-
பிடரி முடியை!

கத்தரித்து கொண்டேன்-
முறுக்கி இருந்த-
மீசையை!

இறக்கி விட்டுட்டேன்-
தூக்கி கட்டி இருந்த-
வேஷ்டியை!

விட்டு விட்டேன்-
"கூட்டத்தோட"-
சுத்துவதை!

சிரித்து மாத்தி கொண்டேன்-
சிடு சிடு என -இருந்த
முகத்தை!

மறந்து விட்டேன்-
கெட்ட வார்த்தையில்-
திட்டுவதை!

தவிர்த்து விட்டேன்-
என்னிடம் உனக்கு-
பிடிக்காததை!

தவித்து விட்டேன்-
தெரிந்த பின்-
என்னையவே உனக்கு-
பிடிக்காததை!!

2 comments:

  1. துவக்கம் தொடர்ச்சி முடிவு மூன்றும் மிக்ச் சிறப்பாக
    அமைந்துள்ளது.மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayya!
      ungalukku periya manasu-
      athanaalthaano-
      padippathoda -mattumallaamal
      vimarsanam thanthu ookkivikkireerkal !
      nantri ayya!

      Delete