Wednesday 1 August 2012

நடப்பதெல்லாம்....



மணற்வெளியில்-
புதைக்க இடம் -
பார்ப்பான்-
கொலைகாரன்!

மணலின் தரம் பார்ப்பான்-
பானை செய்யும்-
தோழன்!

நம் மீது-
ஆப்பிள் விழுந்திருந்தால்-
உணவாகி இருக்கும்!

நியுட்டன் மேல்-
விழுந்ததால்-
புவி ஈர்ப்பு அறிந்தது-
உலகம்!

பாறாங்கல்லே -
தெரிகிறது-
நம் கண்களுக்கு!

அதில் சிற்பம்-
தெரிகிறது-
சிற்பிக்கு!

புல்லில் பனியை-
ரசிப்பது-
ரசனை!

அதனை மிதித்து-
செல்பவன்-
மூடனே!

அழகை-
எழுத்தில் தருபவன்-
கவிஞன்!

அழகை "கெடுத்திட"-
நினைப்பவன்-
காமுகன்!

காந்தி கொலை மட்டும்-
தெரிந்தவன்-
சராசரி வாசகன்!

சுட்டானே கோட்சே-
அதன்" வேரை" தெரிந்தவன்-
உண்மை தெரிந்தவன்!

இயற்கை சீற்றத்தின்-
காரணம் தேடுபவன்-
விஞ்ஞானி!

"சீறிட"செய்தவனை-
நினைத்து அஞ்சுபவனே-
ஞானி !

உடலை வளர்ப்பவன்-
மனிதன்!

உயிரை வைத்திருப்பவன்-
இறைவன்!

"நடப்புகள்" எல்லாம்-
ஒன்றுதான்!

நடப்புகளை நாம்-
பார்ப்பதில்தான்-
வேறுபாடுதான்.....!!!



18 comments:

  1. ///சுட்டானே கோட்சே-
    அதன்" வேரை" தெரிந்தவன்-
    உண்மை தெரிந்தவன்!///

    செம செம!

    ReplyDelete
  2. ம்ம்ம்.......... அருமை

    ReplyDelete
  3. எப்படித்தான் உங்களால் மட்டும் இப்படி சமுதாய சிந்தனையுடன் சிந்திக்க
    முடிகிறதோ எப்போதும் ..... அருமை சீனி !
    [ இன்று என் வலைப் பக்கத்தில் ....
    எந்திர உயிர்ப்பு !

    http://sravanitamilkavithaigal.blogspot.in/ ]

    ReplyDelete
  4. அசத்திட்டீங்க நண்பரே....
    வாழ்த்துக்கள்...
    நன்றி...

    ReplyDelete
  5. “நடப்பதெல்லாம்“
    சாதாரணமாகத்
    தெரிகிறது எங்களுக்கு.

    நடப்புகளின்
    வேறுபாடுகள்
    தெரிகிறது உங்களுக்கு.

    கவிதை அருமைங்க சீனி.

    ReplyDelete
  6. அசத்தல் கவிதை......நண்பா...

    ReplyDelete
  7. //"நடப்புகள்" எல்லாம்-
    ஒன்றுதான்!

    நடப்புகளை நாம்-
    பார்ப்பதில்தான்-
    வேறுபாடுதான்.....!!!//

    சரியான பார்வை. பாராட்டுகள்.

    ReplyDelete
  8. நல்ல இருக்கு



    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

    ReplyDelete
  9. பின்னிட்டீங்க போங்க - அருமையான கோர்வையான வார்த்தைகள் - நாட்டு நடப்பை சமூக சூழலை பிரிச்சி மேஞ்சிட்டீங்க

    ReplyDelete
  10. எல்லாம் எல்லாருக்குமே ஒன்றுதான்.பார்ப்பதிலும்,அதை பயன்படுத்துவதிலும்தான் வித்தியாசம் காண்கிறார்கள்.நல்லதொரு வெளிப்பாடு சீனி !

    ReplyDelete