Tuesday 8 September 2015

என் ஆசைகள் ..!!


மயிலிறகாகி கவிதைப் புத்தகத்தினுள்  ஒளிந்திட !

தாய்ப்பாலாகி குழந்தை முகத்தில்  வாசமாகிட!

ரத்தத்துளியாகி தாய் நாட்டிற்காகப் போராடும் போராளியின் உடலில் ஓடிட!

மழைத்துளியாகி மல்லிகை மொட்டினுள் தங்கிட!

தாவணிமுனையாகி பிரியமானவளின் முக்காடாக மாறிட !

பேனாவின் மைத்துளியாகி,புரட்சியாளனின் எழுத்தினில் ஓர் புள்ளியாகிட!

வாழ்வை அர்த்தமாக்கி,மரணத்திடும்போதும் புன்னகைத்திட !


      


1 comment: