Monday 16 January 2012

உங்களை பற்றியதுதான்...

காய்ந்து போனது-
பூக்களும்!

மடிந்து போனது-
மரங்களும்!

ஆத்திரம் கொண்டது-
சமுத்திரமும்!

பிளவு பட்டது-
பூமியும்!

இருந்த இடம்-
-தெரியாமல் போனது-
எவரேச்டும்!

இழந்தது-
பலத்தை-
இரும்புகளும்!

வந்த வழியில்-
திரும்பி போனது-
மதம் கொண்ட யானையும்!

"கழண்டு" போச்சுன்னு-
சொன்னது -
உறவுகளும்!

நடந்தது இவ்வளவும்-
"மனதில் பட்டதை"-
சொன்னதும்!

நீங்கள் !
தியாகிகள்!

அதனால்தான்-
நான்-
எழுதுவதை-
கவிதை-
என்கிறீர்கள்!

4 comments:

  1. நல்ல சிந்தனை...!
    வாழ்த்துகள் !!

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்! தினமும் ஏதாவது ஒரு கவிதை தந்துவிடுகிறீர்களே. கடையில் உணவு பறிமாறிக்கொண்டே
    வலையில் உணர்வைப் பறிமாறும் ஒப்பற்ற ஒருவர் நீங்கள்.

    ReplyDelete