Sunday 22 January 2012

அய்யா....! சாமி..!

ஊருக்கு-
காத்து வர-
ஜன்னலை திற!

அறைக்குள்-
கதவை சாத்து-
எதை வேணும்னாலும்-
திற!

மக்கள் ஏன் தான்-
மறுக்கிறார்கள்-
அறிவுகண்ணை-
திறக்க!

சீடரே-
கேமரா கண்ணை -
திறந்து வைக்க!

ஆசாமிக்கு-
சபலம் வந்தது-!

வெளிச்சத்திற்கு-
வந்தது!

கற்பழிப்பு புகழ்-
பிரேமானந்தா!

வெடிகுண்டு புகழ்-
அசிமானந்தா!

வீடியோ புகழ்-
நித்தியானந்தா!

மக்கள் ஏமாற-
மாட்டார்கள்-கொஞ்சமாவது
அறிவு இருந்தா!

ஆயிரம் வேர்களை-
கற்றால் தான்-
அரை வைத்தியன்-என்பதுதான்
முதுமொழி!

ஆயிரம் பேரை கொன்றால்தான்-
அரை வைத்தியன்-என்பதாக
மாறியது -புது மொழி!

அன்று-
மண்ணாசை-
பொன்னாசை-
பெண்ணாசை-
துறந்தவன்(வெறுத்தவன்)
முற்றும் துறந்தவன்-
ஆவானே!

இன்று-
முழுசா"தொறக்குரதுதான்-
முற்றும் துறந்தவன்-
என்று எண்ணினார்களோ!
என்னவோ!

4 comments:

  1. இன்று-
    முழுசா"தொறக்குரதுதான்-
    முற்றும் துறந்தவன்-என்று எண்ணினார்களோ!
    என்னவோ!

    அருமை அருமை
    இன்றைய போலிகளின் முகத்திரையை
    கிழித்தெரியும் கவிதை அற்புதம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ayyaa!
      ramani avarkale!
      ungalathu "akamum-puramum"-
      entra kavithaiyai padiththapothu thaan-
      naan ithai ezhuthida ennam vanthathu!
      ungalukku muthalil vaazhthukkal!

      Delete
  2. என்னுடைய கவிதையை விட
    தங்கள் படைப்பு மிகச் சிறப்பாக உள்ளது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramni ayyaa avarkale!
      ungalukku
      vayathil muthirchi mattum-
      alla !
      arivilum muthirchi ullathu-
      aathalaalthaan!
      ippadi matravarkalai urchaakam
      kodukka mudikirathu!
      nantri ayyaa!

      Delete