Saturday 14 January 2012

காதல் வந்தால்..

கழுதையின் சத்தம் -
கேட்கும் கவிதையாக!

கவிதை பேசும்-
கவிஞன் தெரிவான்-
கழுதையாக!

சிறகு முளைக்கும்-
படகுக்கும்!

சிறகு விரிய மறுக்கும்-
பறவைக்கும்!

தெரு கோடி பிடிக்கும்-
மாடியில உள்ளவனுக்கு!

விண் மீனை சேர்த்து -
வீடுகட்ட தோண்டும்!-
குடிசையில் உள்ளவனுக்கு!

வன்முறை பேசும்-
சமாதான புறாவும்'!

பூக்களை துப்பும்-
துப்பாக்கியின் முனைகளும்!

அற்புதமாக்கும்-
அற்பனையும்!

அசிங்க படுத்தும்-
அழகனையும்!

உயிர் நண்பனையும் -
ஒதுக்கிட வைக்கும்!

ஒதுங்கி போறவளை-
உயிராய் நினைக்க வைக்கும்!

மணம் இருக்காது-
தன் வீட்டு மல்லிக்கு!

மூக்கை துளைக்கும்-
அவ வீட்டு ஊமத்தம் பூ!

காதல்-
எத்தனையோ-
மாற்றங்கள் தருவது!

எத்தனையோ பேருக்கு-
ஏமாற்றங்கள் தந்தது!

2 comments:

  1. உள்ளதைச் சொல்வதும் தியாகிகள் குணம்தானே
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ramani sir!
      ungal vimarsanathukku nantri!
      ungal karuththukkal ennai
      pontravarai valarkkum!

      Delete