Thursday 12 July 2012

கெளம்பிட்டாரு....மைனரு ..!!



குளு குளு-
குளியல்கள்!

முகத்தில்-
தடவி கொண்ட-
நுரைகள்!

மழுக்கென-
செய்துகொண்ட-
முகசவரங்கள்!

சட்டை பையினுள்-
பண பையும்!

பண பையுனுள்-
பணமும்!

ஆடைக்குள்-
மனிதன் -
என்பவனும்!

மனிதனுக்குள்-
காம வெறி-எனும்
பேயும்!

வாடகை வாகனம்-
இடம் நோக்கி -
பயணிக்கும்!

இவனுள்ளே-
அம்மிருகம்-
கோர பற்களுடன்-
சிரிக்கும்!

கடந்தது-
சில புற வழி-
சாலைகள்!

தெரிந்தது-
அந்த எல்லைகள்!

பேசி முடிக்கப்பட்டது-
பேரங்கள்!

கொல்லும்-
தின்னும்!

தின்னும்போதாவது-
சாகும்!

ஒரே வலி!
ஒரே வேதனை!

மிருகங்களின்-
வேட்டை-
காட்டில்!

குதறபடுவதுண்டு!
சீரழிப்புகளும்-
உண்டு!

தினம்தினம்-
சித்திரவதை!

வேறு வேறு-
"ரூபத்தில்"நடக்கும்-
வதை!

மனிதன் என-
சொல்லி கொள்பவர்கள்-
வேட்டை-
இருட்டில்!

"வந்தவர்கள்"-
வாழ்வு தொலைந்திருக்க!

"வருபவர்கள்-
வாழ்வை தொலைக்க!

இக்காட்சியை-
காணும்போதெல்லாம்!

மனசாட்சி சொல்லும்-
இவ்வாறெல்லாம்!

"பூச்சி மருந்து-
அடித்து செத்த -
புழுகளாகவும்!"

அப்பூச்சியை தின்னுட்டு-
சாகும் குருவிகளாகவும்"!

வையகத்தில் இப்போது-
சாதாரணமாக -
பார்க்கபடுது!

"தப்புகள்"-
"சரியாக"!

"சரியானவன்"-
தப்பானவனாக!





15 comments:

  1. "தப்புகள்"-
    "சரியாக"!

    "சரியானவன்"-
    தப்பானவனாக!//


    மிகச் சரி
    சரியானதை தவறாகச் செய்வதனால் கூட
    அதிகப் பிரச்சனை இல்லை
    தப்பை மிகச் சரியாகச் செய்வதனால்தான்
    அதிகப் பிரச்சனையே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சமுதாயத்தின் நச்சுருவிகள் இவர்கள். இனங்கண்டுகொண்டால் ஒழிய தப்புவது கடினம். மனம் கனக்கச் செய்யும் பதிவு.

    ReplyDelete
  3. மனிதனுக்குள்-
    காம வெறி-எனும்
    பேயும்!


    "தப்புகள்"-
    "சரியாக"!

    "சரியானவன்"-
    தப்பானவனாக!

    நிதர்சனமான உண்மைகள்

    ReplyDelete
  4. உள்ளீடுகள்
    தகர்க்கப்பட வேண்டியவை ......

    குறியீடுகள்
    கவனிக்கப்பட வேண்டியவை .

    வெளியீடு
    அருமை

    ReplyDelete
    Replies
    1. sarala!

      azhakiya pinnoottathirkku mikka nantri!

      Delete
  5. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தொடருங்கள்

    ReplyDelete
  6. கவிதை மழை பொழிகிறது :)

    ReplyDelete
  7. தப்புக்களைக் கண்டுககொள்ளும்வரை தப்புத் தப்பாமல் தப்புச் செய்தபடிதான் !

    ReplyDelete