Friday 17 August 2012

புத்தாடை...$



நண்பன் கேட்டான்-
சட்டையின் -
வண்ணத்தை!

வாடகை ஓட்டுனர்-
கேட்டார்!
வாங்கிய இடத்தை!

பக்கத்துக்கு வீட்டுவாசி-
கேட்டு-
உதிர்ந்தார்-
ஏளன சிரிப்பை!

பையுனுள் மகள்-
தேடியது-
"தனக்கானதை"!

கட்டியவள்-
கேட்டாள்-
விலையை!

தகப்பன்-
பார்த்தார்-
பின் தொடர்ந்தார்-
மௌனத்தை!

தாய் நீட்டினாள்-
உணவு தட்டை!

அவள் மட்டும்-
உணர்ந்திருந்தால்-
என் பசியின்-
வாட்டத்தை...!!!.

28 comments:

  1. தாயின் சிறப்பை அழகாக சொல்லி விட்டீர்கள்...

    பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அழகான வரிகள் தாயின் சிறப்புக்கு ஈடே கிடையாது

    ReplyDelete
  3. அருமையான வரிகள் நண்பரே.தாயின் மகத்துவத்தை கூறியுள்ளீர்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  4. அதனால தானே அவள் தாய்... அருமை

    ReplyDelete
  5. அருமை
    எப்படி அந்தத் தாயைப்போல
    கவனிக்கவேண்டியதை மிகச் சரியாக கவனித்து
    அற்புதமான பதிவினைத் தருகிறீர்கள்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இரண்டாம் தாய்க்கு என்ன மனத்தாங்கலோ ?
    அனைவருக்கும் வாங்கி வரவில்லை என்றோ ?
    தாயே உருக வைத்தாய் தன்னலம் இன்றி. நன்று சீனி.

    ReplyDelete
  7. சிறப்பானதொரு சிந்தனை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete
  8. அந்த குணம்
    உறவின் சிகரமாம்
    அந்த தாய்க்குதானே உண்டு..
    அருமையாய் ஒரு கவிதை நண்பரே...

    ReplyDelete
  9. தாய்க்கு ஈடேது??!!அருமையாக பதிந்துள்ளீர்கள் சொந்தமே!!மனதிற்கு நிறைவாக உள்ளது.வாழ்த்தக்கள் சொந்தமே!!!

    இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

    ReplyDelete
  10. தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது என்பது மாநபி வாக்கன்றோ?

    ReplyDelete
  11. அவளால் மட்டுமே உணர முடியும் அது தான் தாய்மை.

    ReplyDelete
  12. அருமை...

    \\ தாய் நீட்டினாள்-
    உணவு தட்டை!

    அவள் மட்டும்-
    உணர்ந்திருந்தால்-
    என் பசியின்-
    வாட்டத்தை...!!!.\\

    தாய்க்குத் தானே தெரியும் தன் குழந்தையின் வாட்டம்?

    ReplyDelete
    Replies
    1. arun!

      mikka
      nantri!

      ungal muthal varavukku!

      Delete
  13. ஐயிரு மாதங்கள் கருவறையில்
    ஐயனாய் வந்து காத்திடுவானென்
    மகனென உச்சி மோர்ந்து
    முத்தமிட்டு பரிவுடன் வளர்த்திட்ட
    மகனின் முகமறிந்து என்னதேவை
    என உணர்பவளே தாய்!

    அருமையான கவிதைப் பகிர்விற்கு நன்றி!
    http://www.krishnaalaya.com

    ReplyDelete