Friday 3 August 2012

பிரியனுமா.......!?



"பிடித்த பிறகு"-
"பேசி முடித்தோ"!!

"பேசி முடித்த பிறகு"-
"பிடித்தோ"!!

ஊரு கூடி!
உறவுகளும் கூடி!

மகால்கல் தேடி!
சாப்பிட சிற்றுண்டி!

வருகை புரிந்தவர்கள்-
சென்று விடுவார்கள்-
வாழ்த்தி விட்டு!

வாழ்கை படகினில்-
ஒன்றிணைத்து விட்டு!

ஆணும் பெண்ணும்-
திருமணத்தில்-
இணைவது!

பிறந்ததின்-
வரம் அது!

அது ஒரு-
உடன் படிக்கை!

சேர்ந்தே வாழனும்-
என்கிற நம்பிக்கை!

கையெழுத்திடும் -
ஒப்பந்தம்!

அது-
அன்பின் அச்சாரம்!

சமூகத்தின் -
அங்கீகாரம்!

சிலரோ-
மனம் ஒத்தால்-
"சேர்ந்து "வாழ்வாங்கலாம்!

பிடிக்கவில்லைஎன்றால்-
பிரிந்திடுவார்களாம்!

பிள்ளைக்கு அப்பன்-
யார் என்பார்களாம்!!?

இவர்கள்-
இச்சை தீர -
வாழ்ந்து விட்டு!

"சேர்ந்திடுவார்கள்"-
பிள்ளைக்கு-
விலாசத்துக்கு(இன்சியல்)-
பிச்சை எடுக்க-
விட்டுட்டு!

காதல் காலத்தின்போது-
கடும் சொல்லும்-
கரும்பாய் இனிக்கும்!

கல்யாணத்திற்கு பின்னோ-
சாதாரண வார்தையுன்-
சதா சுடும்!

எதிர்பார்ப்புகளுடனும்-
ஆசைகளுடனும்-
கனவுகளுடனும்-
இணைகிறோம்!

எதிர்பாராதவிதமாக-
பிரியவும் முனைகிறோம்!

பிரிந்து இருந்தவர்கள்-
பந்தத்தில்-
இணைகிறோம்!

"இணைந்த "பிறகோ-
ஏன் பிரியமுனைகிறோம்!

வாழ்கை -
பஞ்சு மெத்தை அல்ல!

அதில் நெறிஞ்சி முற்களும்-
குத்தாமல் விடுவதில்லை!

நீ பெரிதா!?
நான் பெரிதா!?
என்பதல்ல-
வாழ்வின் முறை!

"நமக்குள் பிரிவா"!?-
என்றிருந்தால்-
ஏன் பிரிகிறது-
உறவின் முறை!?




21 comments:

  1. ஃஃஃஃகனவுகளுடனும்-
    இணைகிறோம்ஃஃஃ

    பல அப்படித் தான் நடக்கிறது சகோ ஆனால் முடிவில்..

    ReplyDelete
    Replies
    1. mudivil....
      theriyalaye...


      vanthamaikku mikka nantri!

      Delete
  2. அதானே ஏன் வருது பிரிவினை? சிந்தித்தால் புரியும் உள்வினை

    ReplyDelete
  3. நச் கவிதை சீனி!

    ReplyDelete
  4. எதைச் சொல்லுவது நண்பா எல்லா வார்த்தைகளும் உள்ளத்தை தைக்குதே //////

    காதல் காலத்தின்போது-
    கடும் சொல்லும்-
    கரும்பாய் இனிக்கும்!

    கல்யாணத்திற்கு பின்னோ-
    சாதாரண வார்தையுன்-
    சதா சுடும்!

    ///////////// நிஜம்

    ReplyDelete
  5. அங்கு இருவரின்...
    மனங்கள் சேரவில்லை...!
    பணங்கள் சேர்ந்து விட்டன...!

    ReplyDelete
  6. நீ பெரிதா!?
    நான் பெரிதா!?
    என்பதல்ல-
    வாழ்வின் முறை!

    "நமக்குள் பிரிவா"!?-
    என்றிருந்தால்-
    ஏன் பிரிகிறது-
    உறவின் முறை!?

    அடடா... அருமையான பாடம். வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  7. "பேசி முடித்த பிறகு"-
    "பிடித்தோ"!!

    இது ரொம்ப பிடித்த வரிகள் !
    சாட்டை அடி தொடரட்டும் !

    ReplyDelete
  8. //நீ பெரிதா!?
    நான் பெரிதா!?
    என்பதல்ல-
    வாழ்வின் முறை!//

    சரியாக் கேட்டீங்க சீனி! ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல் தானே வாழ்க்கையே...

    ReplyDelete
  9. அன்பை உண்மையா வைக்காமல் சுயநல அன்போடு,ஏதோ எதிர்பார்ப்போட அன்பு வைக்கிறவர்கள்தான் புரிந்துகொள்ளாமல் பிரிந்துகொள்கிறார்கள் !

    ReplyDelete
  10. நீ பெரிதா!?
    நான் பெரிதா!?
    என்பதல்ல-
    வாழ்வின் முறை!
    இதனை உணர்ந்து கொண்டால் விவாகரத்துக்கள் ஏன் இருக்க போகிறது.

    ReplyDelete
  11. சிறப்பான கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete