Thursday 5 September 2013

செப் 4ஹிஜாப் தினம்!

நீதி மன்றத்தில்-
அன்று!

நடந்தது-
வழக்கொன்று!

விவாதங்கள்-
நடைபெற்றது!

விசாரணைகள்-
நடந்தது!

வழக்கின் விபரம்-
ஆடையை பற்றியது!

ஒழுங்கான ஆடை-
ஒழுக்கங்கெட்டவனுக்கு-
கோபம் மூட்டியது!

தகாத வார்த்தைகளை-
கொட்டினான்!

கண்டபடி -
திட்டினான்!

அப்பெண் -
பயம் கொள்ளவில்லை !

நீதி மன்றத்தை-
நாட வேண்டிய நிலை!

தீர்ப்பு-
திட்டியதற்கு-
அபராதம்!

அப்போதுதான்-
நடந்தேறியது-
அக்கொடூரம்!

அரக்கன் -
கத்தியால்-
அப்பெண்ணை-
 குத்தினான்!

பதினெட்டு குத்துக்களால்-
சிதைத்தான்!

அத்தாயும்-
மடிந்தாள்!

அவளின்-
மூன்று மாத சிசுவும்-
அழிந்தது-
குத்தியதால்!

இறந்தாள்-
வீர மங்கை!

கொளுத்தினாள்-
நெருப்பின் வேட்கை!

மர்வா ஷெர்பினி-
அப்பெண்ணின் பெயர்!

அலெக்ஸ்-
அக்கயவனின்-
பெயர்!

ஜெர்மனி நாட்டில்-
இது நடந்தது!

2009 ஆண்டு -
செப் 4ல் -
நடந்தது!

செப் 4இன்று-
ஹிஜாப் தினமாக-
பிரகடமாகியுள்ளது!

மானத்தோடு-
வாழ்வது-
அவ்வளவு பாவமா!?

உடை அவிழ்த்து-
அலைவதுதான்-
பெண் சுதந்திரமா!?

ஆடையின்றி-
வாழ்பவர்களை-
மறைக்க -
நான் சொல்லவரவில்லை!

ஆடையோடு -
வாழ்பவர்களை-
தடுக்க -
எவனுக்கு-
அதிகாரமில்லை!








2 comments:

  1. நல்ல கேள்விகள்...

    தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    ReplyDelete
  2. அறியாத ஹிஜாப் தினம் குறித்து அறிந்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete