Wednesday 11 September 2013

"எங்கே நிற்கிறோம்"..!!

குளத்து நீரில்-
கிடைப்பதால்-
அயிரை மீன்கள்-
ருசிக்கமறுக்கிறதா!?

கிணற்றில்-
நீர் இருப்பதினால்-
மேகத்தை-
அடையாதிருக்கிறதா!?

நீள் குழலில்-(நிப்பு)
மை இருப்பதினால்-
"ஆழ கருத்துக்களை-"
எழுதிட-
மறுக்கிறதா!?

விதைக்குள் இருப்பதினால்-
மரங்கள்-
விருட்சம் கொள்ளாதிருக்கிறதா!?

"எங்கே நிற்கிறோம்-"
என்பதல்ல-
முக்கியம்!

"எதை நோக்கி நிற்கிறோம்"-
என்பதே-
முக்கியம்!!

3 comments:

  1. மிக அருமையான வரிகள்!

    பல விடயங்களை உணர்த்திச் செல்கிறது..

    ReplyDelete
  2. தன்னம்பிக்கை வரிகள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. எங்கே நிற்கிறோம்-"
    என்பதல்ல-
    முக்கியம்!

    "எதை நோக்கி நிற்கிறோம்"-
    என்பதே-
    முக்கியம்!!//

    அருமை! நன்றி!

    ReplyDelete