Sunday 20 October 2013

"நல்லா காட்டு"...!!

சமைத்ததை-
மூடி வை!
"ஏதாவது "விழுந்திடும்!

காய்கறிகளை-
குளிர்சாதன பெட்டியில் வை!
இல்லையென்றால் -
கெட்டுவிடும்!

பணம் நகையெல்லாம்-
பூட்டி வை!
திருடு போய்விடும்!

ஆனால்-
உடலை மட்டும்-
"நல்லா காட்டு-"
இல்லையானால்-
உலகம் உன்னை-
தூற்றும்!

உணர்வற்றவைகளுக்காவது -
பாதுகாப்பு வளையம்-
தேவையாக இருக்கு!

உணர்வுள்ள மனிதர்களின்-
"எல்லை மீறலுக்கோ"-
நாகரீகம் என்ற-
பெயர் இருக்கு...!!

3 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்... இன்றைய கொடூரத்திற்கு பெயர்...

    ReplyDelete
  2. நரகரீகமாகும்
    நாகரீகம்...

    ReplyDelete
  3. நல்ல நாகரீகம்தான்! கொடுமை!

    ReplyDelete