Friday 25 October 2013

பண்டிகை நாள்!

இலக்கை நோக்கி-
பயணிப்பவர்கள்-
லட்சியவாதிகள்!

சரக்கு விற்க-
"இலக்கு"(டார்கெட்)-
வைப்பது-
ஆளும் கட்சிகள்!

கடல் தண்ணியில-
பயணித்தாலும்-
"திரும்புவது-"
நிச்சயமில்லை!

உழைச்ச காசு-
வீடு வருமா!?-
"டாஸ்மாக்"கினால் -
உத்திரவாதமில்லை!

தமிழ் நாட்டிற்கு-
தண்ணியில-
கண்டம்போல!

குடிச்சி மடிகிறவனுங்களும்-
திருந்துவதாக-
இல்ல !

4 comments:

  1. இரண்டு தரப்புமே திருந்துவதில்லை......

    ReplyDelete
  2. தானாக தான் திருந்த வேண்டும்...

    ReplyDelete
  3. //குடிச்சி மடிகிறவனுங்களும்-
    திருந்துவதாக-
    இல்ல !// இவர்களுக்கு எத்தனை பெரியார் வர வேண்டுமோ? :(
    அருமையான கவிதை!

    ReplyDelete
  4. சரியா சொன்னீங்க! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete