Wednesday 19 March 2014

பிறந்த பூமி !(27)

''உனக்கு என்ன ஆனது!?
கைதியோடு சமாதானம் என்பது வெட்க கேடு!

நீதிமன்ற நடவடிக்கையென நாடகம் நடத்து!

பகிரங்கமாக உமரை தூக்கிலிடு!

அந்த காலகட்டத்தில் அல் கரீமியை சுட்டுக்கொல்ல உறுதியெடு!

வீரர்கள் வேண்டுமானால் கூட்டிச்செல்!
அடியோடு அழித்துவிட்டு என் முன் நில்!

சொல்லிவிட்டார் முசோலினி!
மிகுந்த வருத்ததுடன் வெளியேறினார் கிராசியானி!

லிபியாவில் ஒரே பரபரப்பு!
கிராசியானி சுதந்திரம் பெற்றதர போனதாக முணுமுணுப்பு!

கிராசியானி லிபியா வந்தார்!
உமரைக்காணவே வெட்கப்பட்டார்!

உமர் பட்டினி கிடக்கிறார்!
இரவெல்லாம் தொழுகிறார்!
சிறை அதிகாரி சொன்னார்கள்!

கிராசியானி சிறையறைக்கு சென்றார்!
உமர் தொழுதுக்கொண்டிருந்தார்!

தொழுது முடித்த உமரிடம்-
''அஸ்ஸலாமு அலைக்கும்''-என
கிராசியானி சொன்னார்!

''கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டுமாக..!!''என
உமர் சொன்னார்!

''ஏன் நீங்கள் பட்டினி கிடக்கிறீர்கள..!?-
கிராசியானி கேட்டார்!

உமர் சிரித்துக்கொண்டே சொன்னார்-
''பட்டினி கிடப்பது வீம்புக்காக அல்ல!
இது ரமழான் மாதம் என்பதால் வைக்கபடும்  நோன்பு !

இரவெல்லாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்!

இதுபோன்ற அமைதியான நிலை  எனக்கு கிடைத்ததால் பயன்படுத்திக்கொள்கிறேன்!

''இறைவா !
என் தேசத்திற்கு விடுதலையைக்கொடு!

என் மக்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை அகற்றிவிடு!

நான் உயிரோடுள்ள காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றாலும் மகிழ்வேன்!

என் மரணத்திற்கு பின்தான் நாடு சுதந்திரம் அடையும் என்றால் என்னை ''ஏற்றுக்கொள்''என பிரார்த்திக்கிறேன்!

நீங்கள் போன விஷயம் என்ன ஆனது!?

நிம்மதி இழந்ததாக உங்கள் முகம் சொல்கிறது!

முசோலினி அவர்கள் இன்னும் ஆயுதங்களைத்தான் நம்புகிறாரா..!?

என்னை சுட்டுவிட சொன்னாரா..!?

விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்!!-என
உமர் கேட்டார்!

''உங்களை நான் விளங்கிக்கொண்டேன்!
அதனால்தான் மனப்போராட்டத்தில் சிக்கிக்கொண்டேன்!

உங்களை சுட்டுக்கொல்ல சொல்லிருந்தால்!

எனது அரசியல் வாழ்க்கையை முடித்திருப்பேன் ராஜினமா எனும் கடிதத்தால்!

நீதியின் முன் உங்களை முசோலினி நிறுத்த சொல்லியிருக்கிறார்!-
கிராசியானி சொல்லி முடித்தார்!

''ஓ!
நாடகம் நடத்த போகிறீர்கள்!
அதற்கு நீதி விசாரணை என பெயர் வைத்துள்ளீர்கள்!-
உமர் கேட்டார்!

''இது நாடகமாக நடக்காது!
இதில் அதிரடி திருப்பம் இல்லாது போகாது!-
கிரசியானி சொன்னார்!

கிராசியானி பேச்சில் ஓர் உறுதி தெரிந்தது!
அதனையறிய இன்னும் பயணிக்க வேண்டியிருக்கிறது!

(தொடரும்....!!)



4 comments:

  1. என்னவென்று பார்ப்போம்...

    ReplyDelete
  2. தொடர்ந்து பயணிப்போம். என்ன நடக்கப் போகிறது... தெரிந்து கொள்வோம்!

    ReplyDelete
  3. அது என்ன திருப்பம்? தொடர்ந்து வருகிறேன்!

    ReplyDelete