Friday 21 March 2014

பிறந்த பூமி !(29)

கிராசியானி பதவி துறந்தார்!
புதிய கவர்னரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்!

இத்தாலி செல்ல மறுத்தார்!
மூன்று மாத விடுமுறைக்கு விண்ணப்பித்தார்!

அரசமாளிகையை விட்டு பங்களா எடுத்து தங்கினார்!

கிரசியானிக்கு பாதுகாப்பு எனும் பெயரால் கண்கானிக்கப்பட்டார்!

உமர் முக்தாருக்கோ சலுகைகள் மறுக்கப்பட்டது!

எப்போதுமே விலங்கிடப்பட்டது!

விசாரணை நாள் வந்தது!

உமர் வரும் பாதையில் ராணுவம் நிறுத்தப்பட்டது!

அவ்வழியெங்கும் கூட்டம் அலைமோதியது!

உமர் வந்த வாகனம் கடந்து செல்கிறது!

''நாரே தக்பீர்!
அல்லாஹு அக்பர்!''-என
தக்பீர் மக்களால் எழுப்பபடுகிறது!

நீதிமன்றம் வந்தது!
வாகனக்கதவு திறந்தது!

விலங்கிடப்பட்ட உமர் கனத்தால் சிரமப்பட்டார்!

நீதிபதிக்கு முன் நிறுத்தப்பட்டார்!

''என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதா..!?
இல்லை-
குற்றவாளியென தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளதா..!?
விலங்கிட என்ன காரணம்..!?-
உமர் முக்தார் கேள்வியெழுப்பினார்!

நீதிபதி விலங்குகளை அவிழ்த்திட உத்தரவிட்டார்!

நீதிபதி விசாரித்தார்!

''உம் பெயரென்ன..!?

''உமர் முக்தார்!

''வயது..!?

''எழுபத்திரெண்டு..!

''தொழில்...!!?

''குழந்தைகளுக்கு இஸ்லாமிய கல்வி போதிப்பது..!''

''நாட்டில் நடந்த தாக்குதல்கள்!
இத்தாலியர் மரணங்கள்!
ஆயுதக்கொள்ளைகள்!-
இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கிறதா..!?

''இல்லை..!!

''அப்படியானால் குற்றங்களை ஒப்புக்கொள்கிறீர்களா..!?

''நான் எதற்கு ஒத்துக்கொள்ளனும்!
நீங்கள் கேள்விகளே கேட்கவில்லையே!
பொதுவானவற்றைதானே கேட்டீர்கள்..!?

நீதிபதி அரசுதரப்பு வக்கீலிடம் முணுமுணுத்தார்!

வக்கீல் எழுந்தார்!

அ.வ- இஸ்லாமிய கல்வி நீங்கள் போதித்த குழந்தைகளுக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்குமா..!?

உ.மு-ஆம்! அந்த வயதுடையவர்களும் எனக்கு குழந்தைகள்தான்..!!

அ.வ- ஏன்!? தலைமறைவாக வாழ்ந்தீர்கள்..!?

உ.மு-யார் சொல்லியது ..!?நான் தினந்தோரும் கல்வியை மரத்தடியில் நடத்துவது அனைவரும் அறிந்தது!

அ.வ- நீங்கள் சொல்லிதான் ராணுவம் மீதும்,காவல்துறை மீதும் தாக்குதல் நடந்துள்ளது!

உ.மு-''காவல்துறையும்,ராணுவமும் வரம்புமீறி
 நடந்துள்ளது!ஆதலால் மக்களால் தாக்கப்பட்டுள்ளனர்!

அ.வ- ''நீங்கள் சொல்லிதானே நடந்தது..!?

உ.மு-''பாதிப்புக்குள்ளானவர்கள் யார் சொல்லுக்காகவும் காத்திருப்பதில்லை!

விவாதம் சூடுப்பிடித்தது!
முடிவில்லாமல் பயணித்தது!

அ.வ-''இறுதியாக என்ன சொல்ல வருகிறீர்கள்..!?

உ.மு- ''முழுமையான வாக்குமூலம் தருகிறேன்!
அதனை முழுவதுமாக எழுதிட மூன்று இமாம்களை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!

இமாம்கள் நியமிக்கப்பட்டார்கள்!
இடைவேளை விட்டார்கள்!

மீண்டும் கூடினார்கள்!
நீதிமன்றத்தின் வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள்!

மக்களோடு மக்களாக அமர்ந்து கிராசியானியும் இருந்தார்!

வழக்கின் போக்கை கவனித்தார்!

நீதிபதிகள் அமர்ந்திருந்தார்கள்!

இமாம்கள் அமரவைக்கப்பட்டார்கள்!

உமர் நின்றுக்கொண்டிருந்தார்!

வாக்குமூலத்திற்கு தயாராக இருந்தார்!

கூட்டத்தினரிடையே பெரும் சலசலப்பானது!

அமைதிக்காக்கச்சொல்லி சுத்தியலால் மேசை தட்டப்பட்டது!

(தொடரும்...!!)



4 comments:

  1. முழுமையான வாக்குமூலத்தை அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. வணக்கம் சீனு ...முதல் தொடரிலிருந்து படிக்க ஆசைப் படுகிறேன் ...கண்டிப்பா தொடர்வேன் என நம்புகிறேன்

    ReplyDelete
  3. தொடர்கிறேன்... அடுத்தது என்ன என்பதை அறியும் ஆவலுடன்...

    ReplyDelete
  4. என்ன வாக்குமூலம் கொடுப்பாரோ...

    ReplyDelete