Thursday 27 March 2014

பிறந்த பூமி !(35)

முக்தார் அலி (கிராசியானி)-
சிறையறைகள் கடந்து சென்றார்!

வழியில் ஒரு கூட்டத்தை கண்டார்!

''கிராசியானி!
நீங்கள் அதிபுத்திசாலி!
வழக்கையே திசை திருப்பிய தந்திரசாலி!

நல்லவேளை நீங்கள் உமருக்கு ஆதரவாக வாக்குமூலம் கொடுத்தீர்!

இத்தாலியர்கள் மீது முழு கோபமும் திரும்பாமல் பார்த்துக்கொண்டீர்!

என்ன சொன்னார் உமர்!?

ஒப்புக்கொண்டாரா..!?
மன்னிப்பு கடிதம் தருவாரா..!?''

இத்தனையும்-
தலைமை நீதிபதிதான்தொடர்ந்து கேட்டார் !

முக்தார் அலி தொடர்ந்தார்!

''கிழவர் முரண்டு பிடிக்கிறார்!

கொஞ்ச நாள் சென்றால் வழிக்கு வந்திடுவார்!

தலைமை நீதிபதி தொடர்ந்தார்!

''நாளானாலும் பராவாயில்லை!

''கடிதம்''பெறுவதை தவிர வழியில்லை!

அதைக்கொண்டு போராட்டத்தை இழிவுபடுத்தலாம்!

போராட்டக்காரர்கள் மன உறுதியை குலைக்கலாம்!

முக்தார் அலி தொடர்ந்தார்!

''இனி என்ன வேண்டுமானாலும் நடக்கும்!

எனது பெயரை வரலாறு முழங்கும்!

சொன்னார்!

சென்றார்!

வீடு வந்தார்!

மனைவியிடம் சொன்னார்!

மனைவி மனம் மகிழ்ந்தார்!

''சத்தியத்தை'' மனைவிக்கு மொழிந்தார்!

மனைவியும் மொழிந்தார்!

இஸ்லாத்தை தழுவினார்!

''பாத்திமா முக்தார்''என பெயர் மாற்றினார்!

வீட்டு அலமாரியை அலங்கரித்த மதுபாட்டில்கள்!

வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வந்தவைகள்!

அவை ''தீனார்கள்''மதிப்பு கொண்டவைகள்!

மது பாட்டில்களும் ,கண்ணாடி குவளைகளும் இடம் மாறின!

ஆம்-குழியில் புதைந்தன!

அன்றிரவுதான்!
தம்பதிகள் மது அருந்தாத இரவு!

அவர்களது கைகளை ஆக்கிரமித்தது!

''நபிகளாரின் வாழ்க்கை வரலாறு '' எனும் புத்தகமானது!

இரவு -
அதிகாலையாக மாறியது!

குளித்து விட்டு முக்தார் அலியின் பயணம் பள்ளிவாசலை நோக்கியது!

குளிர்காலம் என்பதால் கம்பளி போர்வைகள் மனிதர்களை விழுங்கி இருந்தது!

அது முக்தார் அலிக்கு ''அடையாளத்தை'' மறைத்துக்கொள்ள ஏதுவானது!

பள்ளிவாசல் வந்தார்!

காலைத்தொழுகை ''பஜ்ர்''முடிந்திருந்தது!

கூட்டம் கலைந்தது!

தலைமை இமாமை நோக்கி சென்றார்!

''அஸ்ஸலாமு அலைக்கும்..!!-
முக்தார் அலி(கிராசியானி) சொன்னார்!

''வ அலைக்கும் சலாம்''-என்றவாறு இமாம் ஏறிட்டு பார்த்தார்!

''நீ...ங்கள் முன்னால் ஜெனரல் கிராசியானி தானே...!!-என இழுத்தார்!

''ஆமாம்! நான் இப்போது முஸ்லிமாகி விட்டேன்!

பெயர் ''முக்தார் அலி''என மாற்றி விட்டேன்!என சொன்னார்!

இமாம் நம்பாதவராக ,''உங்களுக்கு என்ன வேண்டும்...!?-என கேட்டார்!

முக்தார் அலி-
சுற்றும் முற்றும் பார்த்தார்!

உமர் முக்தார் சொன்ன ரகசிய வார்த்தையான-
''ஹுசைன் பின் கர்ரமல்லாஹு''-
என்றார்!

இமாம் ஆடியே போய்விட்டார்!

அறைக்கு அழைத்துச்சென்றார்!

தாழிட சொன்னார்!

தாழிட்டு திரும்பிய முக்தார் அலி அதிர்ந்தார்!

இமாமின் கைகளில் பளபளத்தது துப்பாக்கி!

அது குறி வைத்திருந்தது முக்தார் அலி நெஞ்சை நோக்கி!

(தொடரும்....!!)


4 comments:

  1. அட..... இது என்ன....

    தொடர்கிறேன். அங்கே இமாமாக இருந்தது யார்?

    ReplyDelete
  2. திக் என்று இருக்கிறது... அடுத்து...?

    ReplyDelete
  3. திடீர் திருப்பம்! ஆவலைத்தூண்டுகிறது!

    ReplyDelete