Sunday 9 March 2014

பிறந்த பூமி !(17)

''ஆள் நடமாட்டம் உள்ளது!
விமான சப்தம் கேட்டதும் உருவங்கள் மறைகிறது!-
தகவல் அனுப்பியது வேவு விமானம்!

அதிர்ந்தது -
ராணுவ பீடம்!

கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட மூன்று படகுகள் காலி!

நூற்று இருபது வீரர்களும் காலி!

தேசத்தில் மற்ற பகுதியிலும் கிளர்ச்சி!

நடைபெறுகிறது இத்தாலியர்களை கொல்லும் நிகழ்ச்சி!

மக்ரோனிக்கு தகவல் வருகிறது!

அதற்கான தடுப்புகளுக்கும் ஆலோசனை அனுப்பபடுகிறது!

''குஃப்ரா''திட்டு தோட்டத்திற்கு பயணிக்கனுமா.!?
மற்ற பகுதிகளை பார்ப்போமா.!.?-
மக்ரோனி கேட்டார்!

''கலகக்காரர்கள் புத்திசாலிகள்!
நம்மை திசை திருப்புகிறார்கள்!
திட்டுத்தோட்டத்தை நாம் முடக்கனும்!
அதனால் இந்த பகுதியை இரண்டு கூறாக பிரிக்க முடியும்''-
கிராசியானி திட்டமாக சொன்னார்!

மக்ரோனி தலையசைத்தார்!

கிராசியானி திட்டத்தை சொன்னார்!

''காலை ஐந்து மணிக்கு!
நாம் இருவேறு திசையில் பயணிக்க வேண்டியிருக்கு!

முதலில் 'v' வடிவில் நம் பயணம்!
தெற்கே ஒரு படையும், வடக்கே ஒருபடையும்!

இருபத்தைந்து மைல்கள் நடந்திடனும்!
அதற்கு செலவாகும் நேரம்-
நான்கு மணி பத்து நிமிடமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்!

அதன் பிறகு 'U' வடிவில் வரனும்!
இருபத்தியேழு மைல்கள் நடக்கனும்!

நம் இரு படைகளுக்கும் !
தெரியும் திட்டுத்தோட்டத்தின் தூரத்தோற்றம்!

விளக்கப்பட்டது-
இதில் ஓய்வு நேரம் !
வெயிலின் கொடூரம்!

மைல்கல் கிடையாது!
நடையையும், நேரத்தையும் தவிர்த்து தூரத்தை கணக்கிட முடியாது!

தண்ணீர் அளவோடு தரப்படும்!
தொண்டையை நனைத்தக்கொள்ளவே அது உதவும்!

தண்ணீரின்றி நாம் இறக்கவும் கூடும்!
ஆதலால் தண்ணீர் விஷயத்தில் மிக கவனம்''!

இதில் வேறேதும் சந்தேகம்!-
கிராசியானி கேட்டார்!

வீரர்களிடம் மௌனத்தை கண்டார்!

''இத்தாலிய சிப்பாய்களே!
இறுதி வெற்றி நமக்கானதே!

பழி வாங்கப்பட்டுள்ளோம்!
பழி தீர்க்க போராடுவோம்!

சூளுரைத்தார்கள்!

படைகள் காலை ஐந்து மணிக்கு கிளம்பினார்கள்!

கவர்னர் கிராசியானி தலைமையிலும்!

தளபதி மக்ரோனி தலைமையிலும்!

பிரிந்து சென்றார்கள்-
தெற்கு,வடக்கு என இருவேறு பாதைகளிலும்!

கடந்து விட்டார்கள்!
'V'வடிவ எல்லைக்கு வந்துவிட்டார்கள்!

நேரம் ஒன்பது மணி பத்து நிமிடங்கள்!

ஓய்வு எடுத்தார்கள்!
ஐம்பது நிமிடங்கள்!

இனி 'u' வடிவில் இரு படைகளும் நேரெதிராக வர வேண்டும்!

எதிரிகள் நடமாட்டம் இல்லையென-
 தகவல் சொல்லிக்கொண்டிருந்தது-
வேவு விமானம்!

பாலைவனம் வீரர்களை வரவேற்றது-
காலையில்!

இனி எத்தனைபேரை காவு வாங்குமோ!?-
வெயிலின் கொடூரத்தால்!

(தொடரும்...!!)



4 comments:

  1. கொடுமை தான்...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. திட்டம் பலிக்குமா? தொடர்கிறேன்!

    ReplyDelete
  3. என்ன நடந்தது..... தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    ReplyDelete