Saturday 29 March 2014

பிறந்த பூமி !(37)

கண்கள் காட்சிகளை காண தொடங்கியது!

நாற்காலி ,வரைபடங்கள் அவ்வறையில் இருந்தது!

மொத்தம் ஐந்து பேர்கள்!
முகத்தை மறைத்துக்கொண்டும்,துப்பாக்கியுடனும் நின்றார்கள்!

அக்கூட்டத்தலைவன் துப்பாக்கிகளை கீழிறக்கச்சொன்னான்!

''ரகசிய மொழியாக''தனது வலது கை விரல்களை  
 மூடினார்!

முக்தார் அலி இடது கை விரல்களை மூடினார்!

அவர் இடது கை விரல்களை மூடினார்!

முக்தார் அலி வலது கை விரல்களை மூடினார்!

அவர் மற்றொரு அறைக்கு அழைத்துச்சென்றார்!

முக்தார் அலி அவ்வறையினுள் நுழைந்தார்!

அங்கே வாட்டசாட்டமான நபரொருவர் வந்தார்!

சிறு கட்டாரியை கொண்டு தன் மணிக்கட்டை லேசாக அறுத்தார்!

கட்டாரியை முக்தார் அலியை நோக்கி நீட்டினார்!

அலியும் தன் மணிக்கட்டை அறுத்துக்கொண்டார்!

இருவரின் ரத்தச்சொட்டுகளை கலந்தார்கள்!

கடைசி ''ரகசிய மொழி''யும் முடிந்தது!

முகத்தை துணியால் மூடி இருந்தவர்!

முகத்துணியை நீக்கினார்!

அல்கரீமிதான் அவர்!

முக்தார் அலியை கட்டிப்பிடித்தார்!

முகமன் சொல்லிக்கொண்டார்கள்!

உமர் முக்தாரை கரீமி விசாரித்தார்!

அலி விவரித்தார்!

மேலும் அலி கேட்டார்!

''நீங்கள் இத்தாலிய அரசிற்காக உளவுத்துறையில் உயர் பதவியில் இருந்தவர்!

நீங்கள் எப்படி போராட்டக்குழுவில் இணைந்தீர்!?

கரீமி விளக்கினார்!

''இத்தாலிய சுதந்திர தினத்திற்கு இத்தாலிக்கு வந்திருந்தேன்!

முசோலினியை சந்தித்து உரையாடினேன்!

முசோலினி லிபிய நிலவரத்தை கேட்டார்!

நான் விபரம் சொன்னேன்!

அவர் நம்ப மறுத்ததை உணர்ந்தேன்!

அவர் என் மீதும் சந்தேகம் கொண்டார்!

உமர் முக்தாரை சுட்டுக்கொல்ல உத்திரவிட்டார்!

நான் மட்டும் இல்லை!

லிபியா அரபுக்களில் யாருக்கும் அந்த துணிவு  இல்லை!

நாங்களெல்லாம் உமர் முக்தாரின் மாணவர்கள்!

உமர் அவர்களை எதிர்த்துக்கூட பேச முடியாதவர்கள்!

நான் லிபியா திரும்பினேன்!

போராட்ட நீரோட்டத்தில் கலந்தேன்!

கரீமி விளக்கினார்!

அலி புரிந்துக்கொண்டார்!

மனம் விட்டு பேசிக்கொண்டார்கள்!

நீண்ட கால நண்பர்கள்போல் நேசம் கொண்டார்கள்!

அலி தன் வீட்டிற்கு வந்தார்!

பாத்திமா ஒரு கடிதத்தை நீட்டினார்!

அக்கடிதத்தில் -
''நாளை பிரிவு உபச்சார நிகழ்ச்சி!

தலைமை நீதிபதிகளை இத்தாலிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி!

தாங்கள் வர வேண்டும்!

நீங்கள் நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும்!

அலி படித்து முடித்தார்!

போகவா வேண்டாமா..!? என திண்டாடினார்!

போனால் போராளிகள் சந்தேகம் கொள்வார்கள்!

போகாவிட்டால் இத்தாலியர்கள் சந்தேகம் கொள்வார்கள்!

தூக்கமில்லாமல் போனது!

இரவு கழிந்தது!

காலையில் பால்காரர் கதவை தட்டினார்!
பாத்திமா கதவை திறந்தார்!

பாலுக்காக மட்டும் கதவு தட்டபடவில்லை!

(தொடரும்....!!)

5 comments:

  1. வந்தவர் பால்காரர் மட்டும் இல்லையா...?

    ReplyDelete
  2. அப்ப.. வந்தது இத்தாலியரா போராளியா?

    ReplyDelete
  3. என்ன ஒரு நெருக்கடி? அடுத்து என்ன? ஆவலுடன்!

    ReplyDelete
  4. அடுத்து என்னவோ....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. அடுத்த அதிர்ச்சி என்ன்வோ ?தொடர்கின்றேன் சகோ.

    ReplyDelete