Thursday 16 August 2012

குமுறி கொண்டு இருக்கிறான்......




ஆட்சி இருந்ததால்-
ஆடிடவில்லை!

அது எனது-
சொத்தும் இல்ல!

இறைவன் எனக்கு-
போட்ட பிச்சை -
அதுவே!

தன் இச்சைக்கு பயன்படுத்தினால்-
கேவலம் அதுவே!

உடைத்தெறிந்தேன்-
உயிரை காக்க!-
"உடன் கட்டை" ஏறுதல்
முறையை!

தடுக்க துணிந்தேன்-
பெண்கள் சட்டை போட-
மறுத்த-
தீண்டாமையை!

அதனால்தானோ-
எனக்கு சூட்டுகிறார்கள்-
மதவெறியன் என்ற-
பெயரை!

அரசுக்கு வருமானம்-
கொட்டும் என்றார்கள்-
பிரதானிகள்-
மது விற்றால்!

முற்றாக மறுத்தேன்-
காரணம்-
மக்கள் அலங்கோலமாகி விடுவார்கள்-
மது விற்றால்!

அசிங்கங்கள்-
அந்நியனுக்கு-
கப்பம் கட்டி கொண்டு-
அண்டி வாழ்ந்தார்கள்!

அடி பணிய மறுத்து-
சின்னா பின்ன மாக்கபட்டவன்-
நாங்கள்!

அதனால்தான்-
என்னை அநியாயக்காரன்-
என்கிறீர்கள்!?

எதிரிகள் படையை கண்டு-
அஞ்சிட வில்லை!

நயவஞ்சக நரிகள்-
தள்ளியது என்னை-
படு குழியிலே!

அடிமைத்தனத்துக்கு எதிராகவும்-
என் தேசத்திற்காகவும்-
சல்லடையாக்க பட்டேன்!

அப்படி என் உயிர் -
போனதில் மகிழ்ச்சியுற்றேன்!

கொடுத்தாலும்-
வாங்கினாலும்-
இன்பம்-
முத்தத்தில்!

வென்றாலும்-
வீழ்ந்தாலும்-
இன்பம்-
போராட்ட களத்தில்!

இன்று நான்-
வருந்துகிறேன்!-
ஒரே உயிர் இருந்ததை-
எண்ணி!

இன்னொரு உயிர்-
எனக்கு இருந்திருந்தால்-
போராடி இருப்பேன்-
நாட்டி நிலையை எண்ணி!

இப்படிதான்-
உறுமி கொண்டிருப்பான்!

மைசூர் புலி-
தீரன் திப்பு சுல்தான்!









15 comments:

  1. சிறப்பான கருத்துள்ள கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
    நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
    http://thalirssb.blogspot.in/2012/08/17.html

    ReplyDelete
  2. வீரமிகு வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. மாவீரன் திப்பு சுல்தானை அழகுப்படுதிய உங்கள் வரிகளுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அருமையான வீரதீர வரிகள். //நாட்டி நிலையை எண்ணி! // (நாட்டின் நிலையை எண்ணி!) கூறுங்கள் நண்பரே

    ReplyDelete
  5. ஒவ்வொரு வீரனுக்குள்ளம் இருக்கும்
    உண்மையான துடிப்புதான் அது.
    உங்களுக்குள் கவிதையாகி
    வெளியாகி உள்ளது நண்பரே.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கருத்துக்கள் நிறைந்தது நண்பா

    ReplyDelete
  7. அழகான ஆக்ரோசமான குமுறல்.எமக்கானதைக் கேட்டோம் ‘தீவிரவாதிகள்’என்றார்களே !

    ReplyDelete
    Replies
    1. urimai kettaal-
      intru "antha"pattam-
      ilavasam pola.....


      ungal varavukku mikka nantri!

      Delete
  8. நல்ல கவிதை நண்பா!

    ReplyDelete
  9. ஆதங்க வரிகள் அழுத்தமாய் மனதில் அமர்ந்தன .

    ReplyDelete