Friday 20 September 2013

பெண்மையின் மேன்மை...!!

உலகின்-
முதல் -
ஆணையும்-
பெண்ணையும்-
இறைவன்-
படைத்தான்!

அதன் -
பின்-
மனித உயிர்களுக்கு-
முதல் மடி-
பெண்ணாக -
அமைத்தான்!

எழுதுவதும்-
எறிவதும்-
பேனா வைத்திருப்பவன்-
கைகளில்!

பறக்க விடுவதும்-
பிச்சி எறிவதும்-
பட்டாம் பூச்சியை-
கையில் வைத்திருப்பவன்-
முடிவில்!

சமூக ஒற்றுமைக்கான-
சந்ததிகள்-
வளர்வது-
பெண்களின் மடிகளில்!

அறிஞன் ஆனாலும்-
அவன் -
முதல் வார்த்தை-
தாயின் மொழியில்!

சென்றாள்-
பெண்ணொருத்தி-
சித்த மருத்துவரிடம்!

காரணம்-
சொன்னாள்-
அன்பில்லையாம்-
அன்பிற்குரியவர்களிடம்!

மருத்துவர்-
மருந்து செய்திட-
புலியின் வால் முடி-
வேண்டும் -
என்றார்!

கட்டாயம்-
என்றார்!

புலியை -
தேடினாள்!

தேடலுன் பின்-
கண்டாள்!

பயம்!
தயக்கம்!

ஆனாலும்-
செயலில்-
தீர்க்கம்!

புலி -
பார்த்தது!

முறைத்தது!

இருந்தாள்-
புதுமுகமாக-
புலிக்கு!

நாள் -
செல்ல செல்ல-
ஆனாள்!-
பழக்கபட்டவளாக!

புலி-
அமைதியானது!

அவள்-
 வேலை -
இலகுவானது!

முடியுடன்-
சென்றாள்-
மருத்துவரிடம்!

மருத்துவர்-
முடியை-
எறிந்தார்-
எரியும்-
நெருப்பிடம்!

சொன்னார்-
அவளிடம்!

புலியே-
அடங்கியது-
உன் அன்பிடம்!

உன்-
உறவினர்களும்-
அடங்குவார்கள்-
உனது-
அன்பிடம்!

இதை-
கதைதானே-என
ஒதுக்க முடியாது!

அன்பினாலும்-
முடியும்-என்பதை
மறுக்கமுடியாது!

உடன்பிறப்புகளிடம்-
சொல்வோம்-
நல்லவற்றை!

உரிமையானவர்களிடம்-
சொல்வோம்-
நல்லவற்றை!

ஹுதைபியா-
உடன்படிக்கை!

நபிகள் நாயகத்தின்-
அரச தந்திர-
நடவடிக்கை!

இவ்வுடன்படிக்கையால்-
சஹாபிக்களுக்கு-
வருத்தம்!

இதனால்-
பெருமானாருக்கும்-
மன வருத்தம்!

நபிகளிடம்-(முஹம்மது நபி (ஸல்)
முக்மீன்களின் தாய்-(பெருமானாரின் மனைவிகளில் ஒருவர்)
கேட்டறிந்தார்!

ஆலோசனை-
நாயகத்திடம்-
சொல்லி முடித்தார்!

நாயகம்-
எழுந்தார்கள்!

தலை முடியை-
இறக்கினார்கள்!

குர்பானி-
கொடுத்தார்கள்!

இதனை  கண்ட -
சகாபிகளும்-(நபி தோழர்கள்)
கடைபிடித்தார்கள்!

சங்கடமான-
சூழ்நிலை!

சந்தோசமாக்கியது-
அத்தாயின்-
ஆலோசனை!

பெண்மை -
என்றும்-
மேன்மை!

அதனை புரிந்தால்-
என்றும்-
நன்மை!

புரிந்தவன்-
மனிதன்!

மறுப்பவன்-
மனிதன் எனும்-
மடையன்!

2 comments:

  1. அருமை... பெண்மையை சிறப்பித்தமைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. அன்பின் வலிமை அழகாய் சொன்னது கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete