Tuesday 4 March 2014

பிறந்த பூமி !(12)

''சந்தேக கிராமங்கள் முற்றுகை''!
''பள்ளிவாசல்கள் முற்றுகை''!

வெளியிலிருப்பவர்கள் உள்ளேயும்-
உள்ளே இருப்பவர்கள் வெளியேயும்-
சென்றுவர தடை!

செய்தியை சொல்லியது பத்திரிக்கை!

மக்ரோனிக்கு அழைப்புவிடுத்தார்!

கிராசியானி முன் வந்து நின்றார்!

''ஏன் அவசரப்பட்டீர் !?
ஆபத்தை சந்திக்கவுள்ளீர்!-
கிராசியானி!

''நீங்கள் பேசுவது வியப்பாகவுள்ளது!-
நசுக்குவதுதான் என் இலக்கானது!-
மக்ரோனி!

''அப்பாவிகள் என்ன செய்தார்கள்!?''
கிராசியானி!

''காட்டிக்கொடுக்காததால் அவர்களும் துரோகிகள்''-
மக்ரோனி!

''கடவுளுக்கு பயந்துக்கொள்ளுங்கள்''-
இது கிராசியானி!

''நல்லவேளை கடவுள் நம்பிக்கை எனக்கில்லை!''
இது மக்ரோனி!

''நான் கவர்னர்!
இங்கே நடப்பதற்கெல்லாம் நானே பொறுப்பாவேன்!
என் அனுமதியின்றி நடந்தது தவறு''-
இது கிராசியானி!

''ராணுவ நடவடிக்கை எனக்கானது!
மற்றவர்கள் குறுக்கீடு தேவையில்லாதது!-
இது மக்ரோனி!

பேச்சு காரசாரமானது!

திரும்பி நின்ற கிராசியானிக்கு-
மக்ரோனி கிளம்பியதை  -
காலடி சப்தம் உணர்த்தியது!

மக்களை ராணுவம் ரத்தக்களரியாக்கியது!

தோட்டக்கள் ரத்தங்களைகொண்டு பசியாறியது!

யானைக்காலில் மிதிபட்ட சோளப்பொறி போலவும்!

வெறிநாய்களிடம் சிக்கி வெள்ளாடு போலவும்!

சீரழிக்கப்பட்டார்கள்!
மக்கள்!

மக்களின் வேதனை !
பெரும் சோதனை!

பத்திரிக்கை செய்திகளால் -
கிராசியானி கலங்கினார்!

போராளிகள் பதிலடி கொடுக்கததால்-
''பெரிய அடி '' இருக்கும் என நம்பினார்!

சரிதான்!
அவர் நினைத்தது!

ராணுவ வீரர்களின் -
உயிர்கள் காற்றோடு கலந்தது!

எண்ணூற்றுக்கும் மேற்பட்டோர்கள்!
பலியானார்கள்!

போராளிகள் வாள்களை உருவவில்லை!
துப்பாக்கிகளின் தோட்டாக்களை வீணாக்கிடவில்லை!

பிறகெப்படி!?
அதுதான் அவர்களது அடி!

(தொடரும்...!!)






4 comments:

  1. அவர்கள் கொடுத்த அடி மரண அடியாக இருந்திருக்கும்......

    தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.....

    ReplyDelete
  2. இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

    4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

    நன்றி...

    ReplyDelete
  3. விவாதம் சூடுபறந்திருக்கிறதே..
    வாளும் துப்பாக்கியும் இல்லாமலா?....எப்படி? தொடர்கிறேன்.

    ReplyDelete