Thursday 19 September 2013

சுடு சொல்!

நானொன்றும்-
பூ இதழ்களின்-
மென்மையில்-
லயித்து -
வளர்ந்தவனில்லை!

முற்களை-
முத்தமிட்டு-
வளர்ந்தவன்!

சுடு சொற்கள்-
என்னை-
சுடுவதில்லை!

பாவம்-
அச்சொற்களுக்கே -
சூடுபட்டிருக்கும்!

3 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள்
    நானும் அப்படியே
    பகிர்வு மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. // முற்களை முத்தமிட்டு வளர்ந்தவன்... //

    அருமை...

    ReplyDelete
  3. பாவம் அந்த சொற்களுக்கே சூடு பட்டிருக்கும்...

    ரசித்தேன்.

    ReplyDelete