Monday 30 September 2013

பெண்ணே...மறவாதே...!!

பெண்ணே-
உன்னை-
மலர் என்பார்கள்!

மருவிட-
முனைவார்கள்!

உன்னுள்-
முள்ளை-
வைத்திருக்கவும்-
மறவாதே!

உன்னை-
மென்மை-
என்பார்கள்!

தன்மையானவள்-
என்பார்கள்!

வன்மையாக-
இருக்கவும்-
மறவாதே!

படிதாண்டாதே-
என்பார்கள்!

அடுப்படியில்-
அடக்கிட-
முனைவார்கள்!

அறிவாலும்-
பெறும் பட்டத்தாலும் -
பாரினை -
ஆளபிறந்தவள்-
நீ-என்பதை
மறவாதே!

பெண் சுதந்திரம்-
சுதந்திரம்-என
பிதற்றுவார்கள்!

ஆடை குறைப்பே-
சுதந்திரம்-
என்பார்கள்!

ஆடை குறைப்பு-
அவமானம்-என்பதை
மறவாதே!

"கட்டி கொடுக்கவேண்டியதற்கு-"
படிப்பெதெற்கு-
என்பார்கள்!

சமூக கட்டமைப்பே-
பெண்கல்வியால்தான்-
என்பதை-
மறவாதே!

பெண் முன்னேற்றம்-
கூடாது-
இது-
அறிவீனர்கள்!

பெண்முன்னேற்றமும்-
அவசியம்-
அதுதான்-
அறிஞர்கள்!

7 comments:

  1. நிதர்சனமான உண்மைதான். வாழ்த்துகள். பிடித்திருந்தால் தொடரவும்

    http://www.thamizhmozhi.net

    ReplyDelete
  2. நல்ல அறிவுரைகள்...

    பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
  3. பெண் முன்னேற்ற சிந்தனைக் கவிதை சிறப்பு

    ReplyDelete
  4. பெண் முன்னேற்றம் பற்றிய ஆணின் வரிகள் மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க.

    ReplyDelete
  5. அறிவுரைகள் கூறும் வரிகள் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete