Thursday 5 September 2013

நாமறிவோம்....!!

திண்டுக்கல்!

மிரட்டும்-
இருள்கள்!

நாய் ஊளையிடுது!

வீட்டில்-
"பொருளொன்று" -
வீசபடுது!

அது -
பெட்ரோல் குண்டு!

அந்நகரம்-
பரபரப்பானது-
இச்செய்தியை-
 கேட்டுக்கொண்டு!


நீறு பூத்த-
நெருப்பாக-
மத துவேசம்!

வரவிருக்கும்-
"விநாயகர்"-
விசேஷம்!

இந்நேரத்தில்-
இப்படியொரு-
சம்பவம்!

தாக்கப்பட்டது கூட-
பி ஜே பி காரர்-
வீடானதும்!

எங்கே-
விபரீதம் நடந்திடுமோ!?

தடுக்க -
முடியாமல் போய்விடுமோ!?

சாமானியர்களுக்கு-
கவலை!

கலவரகாரர்களுக்கோ-
சந்தோஷ அலை!

காவல்துறை-
விசாரணை!

கண்டுபிடித்தது-
அக்கயவனை!

குண்டு வீசியவன்-
வீட்டுக்கு சொந்தகாரனே!

பிஜேபியை சேர்ந்த -
பிரவீன் குமார்-
என்பவனே!

காரணம்-
பிரபலம் ஆகணுமாம்!

அதற்கு-
இப்படி செய்தானாம்!

சங்க்பரிவாரர்களே!
உங்கள் "புத்தியை"-
மக்கள் அறிந்தவர்களே!

காந்தியை-
கொண்டீர்கள்!

கையில்-
இஸ்மாயில் என-
எழுதிகொண்டீர்கள்!

தென்காசியில்-
உங்கள் அலுவலகத்திலேயே-
குண்டு வைத்தீர்கள்!

பிறகு -
மாட்டிகொண்டீர்கள்!

இப்படியாக-
எத்தனை எத்தனை-
உங்களது-
பிரித்தாளும் சூழ்ச்சி!

அண்ணன் தம்பிகளாக-
இருக்கும் -
இந்து மற்றும் முஸ்லிம்களிடம்-
பலிக்காது-
உங்கள் சூழ்ச்சி!

இறை வணக்கத்தில்தான்-
வேறுபாடு!

மற்றபடி-
நாங்கள் (இந்து-முஸ்லிம்)-
வாழ்கிறோம்-
நல்லிணக்கத்தோடு!

// திண்டுக்கல் தகவல் -நன்றி;.ஜூனியர் விகடன் 8.9.13//







3 comments:

  1. அருமை...

    அன்புடன் அழைக்கிறேன் :

    ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    ReplyDelete
  2. மிகவும் அருமை..
    //மற்றபடி-
    நாங்கள் (இந்து-முஸ்லிம்)-
    வாழ்கிறோம்-
    நல்லிணக்கத்தோடு!// அப்படியே தொடரட்டும்

    ReplyDelete
  3. உண்மை வரிகள் அழகு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete