Monday 9 September 2013

"கரு" மாற்றம்!

ஆயிரம் வேர்களை -
கற்றால்தான்-
அவன் அரைவைத்தியன்-
இதுவே பழமொழி!

ஆயிரம்பேரை -
கொன்றால்தான்-
அவன் அரைவைத்தியன்-
இப்படி உருமாறியது-
அம்மொழி!

மன்னராட்சியானாலும்-
மக்களை-
வாழ வழி செய்தவர்கள்-
அன்றைய காலம் !

ஜனங்களை கொன்று-
குவித்துவிட்டு-
வல்லரசு நாடு -என
பிதற்றுது-
இன்றைய-
கேவல உலகம்!

3 comments:

  1. கரு மாற்றம் - சிறப்பான கவிதை. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete