Wednesday 29 January 2014

மூன்றாம் சேர மன்னன் !! (13)

''கீரீடம் சம்பவம்!
கொலை சம்பவம்!

அரபிக்கள் மேலுள்ள-
சந்தேகம்!
ராஜ குருவே!
வேண்டும் உங்கள்-
விளக்கம்!

கேட்டார்-
மன்னர்!

'' ஒற்றர் பிரிவு-
என் தலைமையின் கீழ்!

தோண்டிவிட்டார்கள்-
குழி-
''இச்சம்பவங்களால்''-
என் காலின் கீழ்!

அரபிக்கள்-
வந்துள்ளதால்!

அஞ்சுகிறேன்-
தேசம்-
நிறைந்திடுமோ-
இன்னல்களால்!

எல்லோரும்-
சமம் !

இது அவர்களது-
வழியாகும்!

நாம்!
பிராமணர்கள்!
வைசியர்கள்!
ஷத்திரியர்கள்!
சூத்திரர்கள்!

இப்படியாக உள்ளது-
வகைகள்!

சூத்திரர்களை விட-
அரபிக்கள் கீழானவர்கள்!

ராஜகு௫ சொன்னார்!

''குருவே!
இருப்பது -
நான்கு பிரிவுகள்!

அரபிக்களெப்படி!?-
ஐந்தாவதாக-
''நிறுத்தபடுவார்கள்''!

''சரி!
அரபிக்களுடன்-
வர்த்தகம் ஆகுமா!?

இல்லை-
நிராகரிக்கனுமா!?

மன்னர் கேட்டார்!

அமைச்சரொருவர்-
தொடர்ந்தார்!

''அரசே!
நெல்மணிகள்!
மீன்கள்!

விதைப்பதும்-
பிடிப்பதும்-
வெவ்வேறு சாதிகள்!

ஆனாலும்-
அனைவரும் -
அனுபவிப்பவைகள்!

இதற்கு-
அரபிக்கள் மட்டும்-
விதிவிலக்கென்றால்..!?''

கேள்வியோடு நிறுத்தினார் -
அமைச்சர்!

மன்னர் சேரமான் பெருமாள்-
தீர்வுக்கு வந்தார்!

''ராஜ குரு-
சந்நிதானம்!

பூஜை புனஸ்காரங்களோடு-
இ௫க்கட்டும்!

ஒற்றர் பிரிவு-
அமைச்சர் ஒருவரிடம்-
ஒப்படைக்கபடும்!

இந்நடவடிக்கை-
ராஜ குருவின்-
''பளு''வை குறைக்கும்!

அரபிக்கள்-
வணிகம் செய்யலாம்!

மத விழாக்களில்-
கலந்துக்கொள்ளாதி௫க்கணும்!

தீர்ப்பு சொல்லபட்டது!
அவை கலைக்கபட்டது!

அனைவரும்-
கலைந்து சென்றார்கள்!

மூவர் மட்டும்-
இ௫ந்தார்கள்!

அவர்கள்!

மன்னர்!

சேது பத்திரர்-
 மூத்த அமைச்சர்!

மார்த்தாண்ட பூபதி -
படைதளபதியார்!

நம்பீஸ்வரர் கொலையை பற்றி...!?-
மன்னர்!

வினா தொடுத்தார்!

மறு வேட்டையை -
ஆரம்பித்தார்

(தொடரும்..!!)




4 comments:

  1. மன்னரின் கேள்விற்கு பதில் அறிய ஆவல்...

    ReplyDelete
  2. ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  3. நல்ல தீர்ப்பு கொடுத்துள்ளார்! தொடர்கிறேன்!

    ReplyDelete