Thursday 8 August 2013

இஸ்லாமும்- நபிகள் நாயகமும்! (34)


உத்பா என்பவன் -
முடிவுக்கு வந்தான்!

"முடிவுக்கு வந்திடும்"-என
முடிவு செய்தான்!

திட்டத்தினை -
நண்பர்களிடம்-
சொன்னான்!

அனுமதியும் -
பெற்றான்!

நபிகளாரிடம்!-
சென்றான்!

சொன்னான்!

பொன் பொருளின் மேல் -
ஆசையா!?

பெண்களின் மேல் -
ஆசையா!?

ஏதாவது-
"கெட்ட சக்திகளின் '-
சதியா!?

நம் முன்னோர்கள்-
"செய்தவற்றை"-
விமர்சிப்பது முறையா!?

பிரகசிப்பதை -
கைவிடுவீரா!?

புது மதத்தை -
விட்டு விடுகிறீரா!?

முடிந்ததா!?
நபிகளார்-
கேட்டார்கள்!

பிறகு-
திருமறையை-
ஓதினார்கள்!

ஓதி முடிந்ததும்-
நீங்கள்-
செல்லலாம்-
என்றார்கள்!

ஓதியதில்-
அர்த்தங்கள்-
பொதிந்திருந்தது!

உத்பாவின் -
உள்ளம் நடுக்கம் -
கண்டது!

ஒருவர் சொன்னதால்-
ஏற்கவில்லை!

எல்லா தலைவர்களும்-
சேர்ந்து சொன்னால்-
ஏற்கலாம்-என்று
மன நிலை!

எதிரி தலைவர்கள்-
நபிகளாரை-
"அழைத்து"-
 சொன்னார்கள்!

நபிகளார்-
முடியாது-என்பதை
உறுதி செய்தார்கள்!

சரி!
அடுத்த முயற்சி!

சமரச பேச்சி !

'நாங்கள்-
வணங்குகிறோம்-
உங்கள்-
கடவுளை!

நீங்கள்-
வணங்கனும்-
எங்கள்-
சிலைகளை!

இம்முடிவையும்-
சொன்னார்கள்-
எதிரிகள்!

அதற்கு-
பதிலானது-
பின்வரும் -
இறை வசனங்கள்!

'உங்கள்-
சிலைகளை-
 நான் வணங்குபவன் அல்ல-
நாங்கள் வணங்குபவனை -
நீங்கள்-
வணங்குபவர் அல்லர்!-
உங்கள் செயலுக்குள்ள -
கூலி உங்களுக்கு-
எங்கள் செயலுக்கு உரிய-
கூலி எங்களுக்கு!'(109;1-6)

இப்படியாக-
இறைமறை -
இறங்கியது!

எதிரிகளின்-
முகத்தில்-
அறைந்தது!

(தொடரும்....)




2 comments:

  1. இனிய ரமலான் நல்வாழ்த்துகள்...

    வெற்றிவேல்...

    ReplyDelete
  2. இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்......

    தொடர்கிறேன்...

    ReplyDelete