Thursday 1 May 2014

கசிகிறது...!!

உதடுகளுக்கு
மௌனமெனும்
பூட்டுப்போட்டு கொண்டாய்!

கண்களை மறைக்க
ஏனோ!?-
மறந்து விட்டாய்!

நீ
மறைத்த உனதன்பை
கண்களின் வழி அறிகிறேன்!

அணைகளின்
இடுக்குகளில்
கசியும் தண்ணீரைப்போல!

உன் கண்ணில்
கசியவே செய்கிறது
எனக்கான
உன் எண்ணங்கள்!

     


1 comment:

  1. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete