Tuesday 10 June 2014

அழகுகள்...!!

பனியினால்
ஈரமான பூமி!

கரும்பாறையில்
வெள்ளைக்கூந்தலாய் அருவி!

வெயில் காலத்திலும்
குளிர்தரும் வேப்பமரம்!

நீண்ட பெருவெளியில்
ஒற்றை பனைமரம்!

தாயின் தோள் சாய்ந்து
தூங்கும் குழந்தை !

முன்னங்காலில்
தலை வைத்திருக்கும் பூனை!

மண்ணை மீட்கும்
போராளியின் கோப பார்வை!

நொடிப்பொழுதில் கடந்திடும்
காதல் பார்வை!

தொடு வானம்!
தொடாத மேகம்!

கரையில் தெரியும்
தீவுகள்!

தீவிலிருந்து பார்க்கும்
எல்லையில்லா கடல்!

சுருக்கம் விழுந்த
ஆச்சாமார் (பாட்டி) கன்னங்கள் !

மை தீட்டிய
கண்கள் !

உலகெங்கும் அழகெல்லாம்
கொட்டி கிடக்கிறது!

ரசிக்க
லயிக்க
மானுட மனங்கள்தான்
பஞ்சமாக இருக்கிறது!

2 comments:

  1. உண்மை தான்.
    அருமை.

    ReplyDelete
  2. உலகெங்கிலும் அழகு கொட்டிக் கிடக்கிறது.....

    உண்மை தான்.

    ReplyDelete