Saturday 1 December 2012

வெளிச்சங்கள்"! (5)

"என் தேசம்-
பூங்காவை போன்றது-
பல வண்ண-
மலர்கள் இருப்பது போல்-
பல சாதி மதங்கள்-
கொண்டது-என
நேரு சொன்னார்கள்!

இன்றைய-
மக்களின் நிலையை-
காண்பாரேயானால்-
நொந்தே மடிந்திருப்பார்கள்!

பெரும்பகுதி-
மலர்கள்-
கருகி விட்டது!

ஒரு-
பகுதி வளர்ச்சி-
சாதனையாக-
காட்டபடுது!

சுதந்திரம்-
வாங்கி-
அறுபது ஆண்டுகளுக்கு-
மேலாகி விட்டது!

இன்னும்-
வறுமை -
மாறவில்லை!

பட்டினி-
சாவுகள் -
குறையவில்லை!

தமிழ் நாட்டில்-
மின்சாரமே-
 இல்லை!

இதுக்கா-
நம் சுதந்திர போராட்ட-
தியாகிகள்-
மடிந்தார்கள்!?

மண்ணில்-
புதைந்தார்கள்!!

சிலர்-
பணக்கார பட்டியலில்-
இடம் பிடித்து-
விட்டால்!

ஏழைகள்-
வயிறுகள்-
நிறைப்பிடுமா-
அச்சாதனை-
பட்டியல்!?

ஒவ்வொரு-
முறையும்-
வறுமையை-
ஒழிப்போம்!
ஊழலை-
ஒழிப்போம்-என
சொல்றாங்க!

கேட்டு கேட்டு-
நம் காதுகளே-
"புளிச்சி"-
போச்சிங்க!

எதிர் கட்சி-
போன முறை-
நாடாளு மன்றத்தை-
நடத்த விடவில்லை!
காரணம்-
ஊழல்னு-
சொன்னாங்க!

இவங்க-
சவ பெட்டியிலேயே-
"ஆட்டைய-"
போட்டவங்க!

இந்த முறையும்-
முடக்குவோம்னு-
சொல்றாங்க!
காரணம்-
சில்லறை வணிகத்தில்-
அந்நிய முதலீடுனு-
சொல்றாங்க!

இவங்கதான்-
போன முறை-
ஆளும்போது-
அடித்தளம்-
இட்டவங்க!

இது-
எப்படி -
இருக்குங்க!?

எது-
எப்படியோ-
மக்கள் வரிபணங்கள்-
"மண்ணா போச்சிங்க!"

மக்களோ-
நடுதெருவுல-
நிக்குறாங்க!!

(குமுறல்கள் தொடரும்....)




8 comments:

  1. அரசியலைச் சாடி வரும் சாமானியன் கோபத்தினை கவிதையில் கான்கின்றேன் சீனி சவப்பெட்டியில் கூட ஊழல் செய்தவர்கள் !ம்ம்ம் நம் தாய் நாட்டிலும் இதே நிலைதான்!

    ReplyDelete
  2. எதில் தான் ஊழல் இல்லை-என்றாகி விட்டது...?!

    ReplyDelete
  3. அவலங்களை புலம்பலாகத்தான் வெளிப்படுத்த முடிகிறது நம்மால்! காத்திருப்போம்!

    ReplyDelete
  4. இவங்க-
    சவ பெட்டியிலேயே-
    "ஆட்டைய-"
    போட்டவங்க!
    ///////////////

    புதுமை...:)
    அம்பானி குடும்பமே போதும் பெரும்பகுதி வறுமையை ஒளித்திடலாம்

    ReplyDelete