Thursday 16 February 2012

கருவாச்சிக்கு...

எப்படி-
 நீ-
எண்ணிடலாம்-
நான்-
உன்னை வெறுப்பேன்-
என்று!

நீயாக வருந்திடுவாயோ-!?
எனக்கு உன்னை-
பிடிக்கவில்லை -
என்று!

தோலை பார்த்து-
 சம்மதிக்க-
நாம் நடத்த போவது-
ஆடை அலங்கார -
நிகழ்ச்சியா-!?

இல்லை -
குடும்ப வாழ்க்கையா!?

சிலருக்கு அழகு-
கிடைக்கலாம்-
அழகு சாதன பொருளால்!

அழகுசாதன பொருளுக்கே-
ஏக்கம் வரும்-
நீ !
பயன்படுத்தாததால்!

என் தாயும் -
தகப்பனும் -
உன் நிறமாக இருக்க!

என்னால் எப்படி முடியும்-
உன்னை நான் வெறுக்க!

காலம் முழுக்க-
ஒரே நிறம்தான்-
கடலும் வானமும்!

வெறுப்பதில்லை யாரும்-
இதனையாவும்!

உன்னிடம்-
 எனக்கு-
பிடித்தது-
எதார்த்தம்!

எனக்காக நீ-
செய்ய வேண்டாம் -
அலங்காரம்!

அடி பட்டு-
சாகும் மின் விளக்கில்-
ஈசல்!

மயங்கி கிடக்கிறார்கள்-
மனிதர்கள் விளம்பரத்தில்!

எல்லோரும் திட்டினார்கள்-
புகை இலை தயாரிக்க -
போன நிறுவனத்தை!

இது தராது-
லாபத்தை என!

விளம்பரம் செய்தார்-
"புகை"பிடிப்பது-
ஹீரோக்களின் அடையாளம்னு!

வாழ்வு நாசமாக-
சிகரட்டை வாங்கி வாங்கி-
ஊதுறாங்க!

"மண்ணாங்கட்டியை "வாங்கி கொள்-
முகத்தில் பூசிக்கொள்!

மத்தவங்களுக்கும்-
பிடிக்க-
மாப்பிள்ளைக்கும் -
பிடிக்க!

என்றெல்லாம்-
 காட்ட படுது-
விளம்பரத்திலடி!

அதுல ஏமாந்தது-
நீயும் ஒருத்தியடி!

உன் மேல்-
 வைத்து இருக்கிறேன்-
பாசத்தை!

உன்னிடம்-
 யாசித்து நிக்கிறேன்-
நேசத்தை!

(மண்ணாங்கட்டி அழகு சாதனபொருளுக்கு
நான் வைத்த கற்பனை பெயர்)

10 comments:

  1. உங்கள் கவிதையும் மிக அலங்காரமின்றி
    யதார்த்தமாக அழகாக உள்ளது சீனி.
    அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. srawani!
      ungal karuthukku-
      varavukkum
      mikka nantri!

      Delete
  2. நல்ல அழகா விளம்பர மோகத்தை பற்றி சாடி ஒரு கருத்தை சொல்லி இருக்கீங்கள். வாழ்த்துக்கள் தோழரே.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral!

      ungal varavukkum-
      karuthukkum!
      rompa nantri!

      Delete
  3. உங்களுக்கு கருத்து எழுதும் போது அதில் இருக்கும் வோர்ட் வெறிவிகேசன் என்கிற ஆப்சனை எடுத்து விடுங்கள் அது கருத்துக்கள் எழுதுபவர்களுக்கு ஒரு எரிச்சலை கொடுக்கும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral!

      brother!
      mannichidunga ennai-
      word verification enakku-eduthuda
      theriyala !

      nanparkal solkiraarkal-
      naanum nanparkalidam-
      kettu seythida muyal kiren'

      kasdathirkku varunthukiren!

      Delete
  4. அன்புக்கு அலங்காரம் தேவையில்லை.

    ReplyDelete
    Replies
    1. Hemaa!
      ungal varavukkum-
      karuthukkum-
      nantri!

      Delete
  5. seenu seeeenuu kavithai superaa irukku...

    night 1.40 kku ore saththyam pottu sirichitten... neenga ennmaa tension aagi kelvi kettu irukeenga...aaththadi payankku ivvalavu kobam kuudathu....

    romba sirichitten ...really very very superbbbbbbbbb.........

    ReplyDelete
    Replies
    1. kalai ;
      ungalukku rompa -
      nantri!

      karuthukkum-
      azhakaaka pinnoottam-
      koduththathukkum!

      Delete