Wednesday 9 January 2013

சதை துண்டு....!!

கழுத்து-
அறுத்து!

தோல்-
உரித்து!

தலை கீழாக-
தொங்க விட்டு!

கழிவுகளை-
அகற்றி விட்டு!

கறி-
ஒரு பக்கமாக!

எலும்புகள்-
மறு பக்கமாக!

இறைச்சி கடைகாரர்-
இருப்பார்-
வாடிக்கையாளர்களை-
எதிர்பார்த்துக்கொண்டு!

அணிந்திருக்கும்-
ஆடைகளை-
காற்றில் -
ஆட விட்டு!

ஒவ்வொன்றாக-
கழற்றி-
 வீசி  விட்டு!

நேரம்-
செல்ல செல்ல-
இரு கைக்குட்டை அளவே-
மிஞ்சம் வைத்து கொண்டு!

அழகை -
காட்டிடுவார்-
சிரித்து கொண்டு!

இதனை-
ஒருவர்-
இருப்பார்-
புகைப்படம்-
எடுத்துகொண்டு!

"கறி வைத்து"-
ஒருவர்-
வயிறு பிழைக்கிறார்!

மற்றொருவர்-
"சதையை வைத்து"-
வயிறு வளர்க்கிறார்!

"கடைகாரர்"-
பசிக்கு -
உணவு விற்கிறார்!

"படக்காரர்"-
"காம பசி"-
ஏற்றுகிறார்!

எனக்கோ-
குருதிபடிந்த-
கைகளில்-
முத்தமிட-
ஆசை!

"உருவியதை"காட்டி-
பிழைப்பவரை-
எட்டி மிதிக்காமல்-
போகவும்-
ஆசை!

முத்தமிடுவது-
மரியாதைக்காகவே!

"மிதிக்காமல்"-
போவது-
என் பிஞ்சி போன-
செருப்புக்கு-
இழுக்கு வாராமல்-
இருக்கவே!


2 comments:

  1. ஆழமான அழுத்தமான உணர்வுகள் ...

    ReplyDelete
    Replies
    1. maken sako..!

      mikka nantri sako..!

      karuthittamaikku...

      Delete